செய்திக்கொத்து

2 mins read
21a2cf86-a87a-484c-9983-ae9b4a2aaa45
-

பெருமையுடன் தோற்ற வீராங்கனை

உலக பூப்பந்து சம்மேளனத்தின் பொதுவிருதுப் போட்டியின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை இயோ ஜியா மின் (படம்) தோல்வி அடைந்து உள்ளார். சுமார் 34 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் 3வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் (21-11, 21-14) அவர் தோல்வியைத் தழுவினார். ஆனால் இத்தகைய இறுதிச்சுற்றில் பங்கேற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை அவர் சாதித்துள்ளார்.

10 பேருடன் நியூகாசல் சமநிலை

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நார்விச்சுக்கு எதிரான போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நியூகாசல் களமிறங்கியது.

ஆனால் செயின்ட் ஜேம்சஸ் பார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அதனால் சமநிலை மட்டுமே காண முடிந்தது. தப்பாட்டம் ஆடியதால் நியூகாசலின் சியாரன் கிளார்க்குக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. இதன் காரணமாக எண்பது நிமிடங்களாக நியூகாசல் பத்து ஆட்டக்காரர்களுடன் விளையாடியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் லீட்ஸ் குழு கூடுதல் நேர ஆட்டத்தில் போட்ட கோலால் கிறிஸ்டல் பேலஸ் குழுவை 1-0 என வெற்றி கொண்டது. லீட்ஸ் குழுவின் கோலை பிரேசிலிய வீரர் ரஃபினா பெனால்டி வாய்ப்பின் மூலம் போட்டார்.

சுசுகி கிண்ணம்; சிங்கப்பூர் உறுதி

ஓமிக்­ரான் கிருமி புதிய அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தியிருப்­ப­தால் மீண்­டும் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன. இருந்­தா­லும் சுசுகி கிண்­ணப் போட்­டியை நடத்­து­வ­தில் சிங்­கப்­பூர் உறு­தி ­யு­டன் இருந்து வரு­கிறது. வரும் டிசம்­பர் 5ஆம் தேதி போட்டி தொடங்கு­கிறது. கொவிட்-19 பர­வும் சூழ்­நி­லை­யில் நாட்டை முன்­னேற்­றப் பாதை­யில் இட்­டுச் செல்ல இந்­தப் போட்டி முக்­கிய பங்கு வகிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆசி­யான் காற்­பந்து சம்­மே­ள­னம் கடை­சி­யாக மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு இவ்­வட்­டா­ரத்­தின் ஆகப்­பெ­ரிய இந்­தக் காற்­பந்­துப் போட்­டியை நடத்­தி­யது. பத்து நக­ரங்­களில் நடந்த 26 போட்­டி­களில் 750,000 ரசி­கர்­கள் பங்­கேற்­ற­னர். ஆனால் இம்­முறை மிக­வும் குறை­வான எண்­ணிக்­கை­யில் பார்­வை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.