'ஓமிக்ரான் ஆபத்தானது என்பதற்குச் சான்று இல்லை'

2 mins read
6f548ed1-052b-4051-9b40-e8061874be3f
-

சிட்னி: புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கிருமி கொடிய நோய் என்பதற்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை என்று ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தலைவர் பால் கெல்லி நேற்று தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் 300க்கு மேற்பட்ட தொற்றுப் பாதித்தவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களுக்கு இலேசான பாதிப்பு மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அத்துடன் தொற்றுப் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் அறியப்படவில்லை," என்று பேராசிரியர் கெல்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஏழு பேருக்கு கொவிட்-19 உருமாறிய ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு பதிவானது. இவர்கள் யாரும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரவில்லை. ஏழாவதாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் டோஹா, கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பல நாடுகளில் ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். எனவே, ஓமிக்ரான் கிருமிக்கு எதிராகப் போராடும் ஆற்றல் தடுப்பூசிக்கு இல்லை என்பதற்கு சான்று ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் ஓமிக்ரான் கிருமியால் யாரும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை.

உலக நாடு­களை பெரிய அள­வில் அச்­சு­றுத்­த­லைத் தந்­துள்து புதிய உரு­மா­றிய ஓமிக்­ரான் தொற்று. டெல்டா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­கள் இதற்கும் பொருந்­தும். அத­னால் ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மி­யால் ஏற்­படும் உயி­ரி­ழப்­பு­களை நம்­மால் தவிர்க்க முடி­யும் என்று அந்­நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர் டெட்­ராஸ் அத­னோம் தெரி­வித்­துள்­ளார்.

ஓமிக்­ரான் போன்ற புதிய கொவிட்-19 கிரு­மி­கள் உல­கம் முழு­தும் பர­வும் வகை­யி­லான சூழலை உல­கம் உரு­வாக்கி வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்­தது. அத­னால் உல­கத்­தில் உள்ள அனைத்து நாடு­களிலும் தடுப்­பூசி முழு­மை­யா­கப் போடப்­ப­ட­வில்லை என்­பதை அந்­நி­று­வ­னம் சுட்­டி­யது. அத்­து­டன் ஏற்­கெ­னவே உலகை ஆட்­டிப்­ப­டைக்­கும் டெல்டா உரு­மா­றிய தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மூலம் புதிய ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­க­லாம் என்­றும் அந்­நி­று­வ­னம் வலி­யு­றுத்­தி­யது.