கொழும்பு: நாட்டில் முதல்முறையாக ஓமிக்ரான் தொற்றுச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது என்று இலங்கை சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அண்மையில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஒருவர் புதிய உருமாறிய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சுகாதார அமைச்சு கூறியது.
"மரபணு வரிசை சோதனை மூலம் ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளியை அடையாளம் கண்டுபிடித்துள்ளோம். நாங்கள் அச்சமடையவில்லை. சூழ்நிலையை சமாளித்து வருகிறோம்," என்று சுகாதார சேவைகளின் துணை இயக்குநரான டாக்டர் ஹேமந்த் ஹேராத் தெரிவித்தார்.
சென்ற வியாழக்கிழமை அன்று இலங்கையில் மொத்தம் 735 புதிய தொற்றுச் சம்பவங்களும் 27 பேர் தொற்றுக்குப் பலியானதும் பதிவாகியுள்ளது.
ஏறக்குறைய 10,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

