இந்ேதானீசியா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலம் பத்து நாட்களாக அதிகரிப்பு

1 mins read
af15d4e2-ef6f-4ad5-a15e-15ed47573bee
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா, அைனத்து வெளி­நாட்­டுப் பய­ணி­ க­ளுக்­கும் தனி­மைப்­ப­டுத்­தும் காலத்தை ஏழு நாள்­க­ளி­லி­ருந்து பத்து நாள்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது. இது, நேற்று முதல் அம­லுக்கு வந்­தது. இதற்கு முன்­ன­தாக தென்­னாப்­பி­ரிக்கா, போட்ஸ்­வானா, நமி­பியா, ஸிம்­பாப்வே, மலாவி, லெசோத்தோ, மொஸாம்­பிக், எஸ்­வாட்­டினி, அங்­கோலா, ஸாம்­பியா, ஹாங்­காங் ஆகிய நாடு­க­ளுக்கு இரு வாரங்­க­ளுக்­குள் சென்­ற­வர்­கள் இந்­தோ­னீ­சி­யா­வுக்குள் நுழை­யத் தடை விதிக்­கப்­பட்­டது. இந்­தோ­னீ­சிய குடி­மக்­க­ளுக்கு மட்­டும் இதி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டது. ஆனால் அவர்­களும் 14 நாட்­கள் தனி­மை­யில் தங்க வேண்­டும்.

இந்த நிலை­யில் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கான தனி­மைப்­ படுத்தும் காலத்தை அதி­க­ரித்து அதி­பர் ஜோக்கோ விடோடோ உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஜாவா, பாலி­ பகுதிகளில் கொவிட்-19 தடுப்பு நட­வ­டிக்­கை­ க­ளுக்கு பொறுப்பு வகிக்­கும் கடற்­துறை விவ­கா­ரம் மற்­றும் முத­லீட்டு ஒருங்­கி­ணைப்பு அமைச்­சரான லுஹுட் பின்சார் பன்ட்ஜய்டான் தெரிவித்தார்.

புதிய ஓமிக்ரான் கிருமி பற்றி முழுமையாக தெரியும் வரை தனிமைப்படுத்தும் கொள்கை அப்போதைக்கு அப்போது பரிசீலிக் கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.