பள்ளிக் கல்வியை நிறுத்திய 21,316 மாணவர்கள்

1 mins read
b67ebcf7-f2bb-4a20-8ae0-94cf336aafc9
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொவிட்-19 சூழல் பெரிய அள­வில் உரு­வெ­டுத்த சென்ற ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து இவ்­வாண்டு ஜூலை மாதத்­திற்கு இடைப்­பட்ட காலத்­தில் 21,316 மாண­வர்­கள் பள்­ளிக் கல்­வியை நிறுத்­தி­ய­தாக அந்­நாட்­டின் கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்­திற்­கும் டிசம்­பர் மாதத்­திற்­கும் இடையே 11,301 பேர் பள்­ளிக் கல்வியை நிறுத்­தி­யி­ருக்­கின்­ற­னர். இவ்­வாண்டு ஜன­வ­ரி­யிலிருந்து ஜூலை வரை­யி­லான காலத்­தில் 10,015 மாண­வர்­கள் பள்­ளிக்­குச் செல்­வதை நிறுத்­தி­யுள்ளனர்.

மலே­சியக் கல்வி அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் உள்ள தக­வல்­க­ளின்­படி அந்­நாட்­டில் மொத்­தம் 5,038,318 மாண­வர்­கள் உள்­ள­னர். இந்த எண்­ணிக்­கை­யில் பாலர் பள்ளி சிறு­வர்­கள், தொடக்­க­நிலை, உயர்­நிலை மாண­வர்­கள் உள்­ளிட்­டோர் அடங்­கு­வர்.

நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை என்­ற­ழைக்­கப்­படும் முடக்­க­நி­லையை மலே­சியா முதன்­மு­த­லில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் எட்­டாம் தேதி­யன்று நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது. பல கட்­டங்­க­ளைக் கடந்த அந்­நிலை நடப்­பில் இருந்­த­போது பள்­ளி­கள் மூடப்­பட்டு பாடங்­கள் மெய்­நி­க­ரா­கக் கற்­றுத்­த­ரப்­பட்­டன. உல­கின் பல பகு­தி­க­ளைப் போல் மலே­சி­யா­வும் தொடர்ந்து கொரோனா­வு­டன் போராடுகிறது.