வாஷிங்டன்: அமெரிக்கா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள், ஒரு
நாளுக்கு முன்னர் கிருமித்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை எடுக்கவேண்டும் என்ற விதிமுறை நடப்புக்கு வந்துள்ளது.
ஓமிக்ரான் உருமாறிய கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த விதிமுறை பல பயணிகளுக்குத் தலைவலியை ஏற்
படுத்தியுள்ளது.
ஓமிக்ரான் அறியப்படுவதற்கு முன்பு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதொற்று இல்லை என்பதை உறுதிப்படும் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என்று இருந்தது.
ஆனால் பல இடங்களில் பரிசோதனை முடிவு வர ஒருநாளுக்கும் மேல் ஆகக்கூடும் என்பதால், புதிய விதிமுறையைப் பின்பற்றுவது சிரமமாக உள்ளதாகவும் அதனால் தங்களது பயணத் திட்டங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கிருமித் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை பிரிட்டனும் நடப்புக்கு கொண்டு வந்தது.
ஓமிக்ரான் தொற்றக்கு முன்பு, பிரிட்டன் செல்லும் பயணிகளுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த பரிசோதனை முடிவு வரும்வரை இரண்டு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.