தைவானில் தொற்று; எலிக் கடி காரணமா என விசாரணை

தைவானில் தொற்று; எலிக் கடி காரணமா என விசாரணை

1 mins read
2740591d-c6df-4465-a4d8-54a8a201ff4b
-

தைப்பே: ஒரு மாதத்­திற்­கும் மேலாக தைவா­னில் உள்­ளூர் கிரு­மித்­தொற்று சம்­ப­வம் பதி­வா­காத நிலை­யில், ஆய்­வக ஊழி­யர் ஒரு­வ­ருக்கு நேற்று தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

தைவா­னின் முன்­னணி ஆராய்ச்சி மையத்­தில் பணி­பு­ரி­யும் அந்த 20 வயது பெண்­மணி வெளி­நாடு எங்­கும் செல்­ல­வில்லை என்­றும் அவர் மொடர்னா தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர் என்றும் சுகா­தார அமைச்­சர் சொன்­னார்.

ஆய்­வக எலி ஒன்று அவ­ரைக் கடித்­த­தா­க­வும் அதன் கார­ண­மாக அவ­ருக்­குக் கிரு­மி தொற்றி இருக்­குமோ என்ற கோணத்­தில் ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக கிருமி ஆய்­வின் மூத்த அதி­காரி ஒரு­வர் சொன்­னார்.

அப்­பெண்­ணிற்கு டெல்டா கிருமி ­தொற்­றி­யி­ருக்­கும் என்று நம்­பப்­ப­டு­வ­தாக தைவான் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் துடைத்­தொ­ழிக்­கும் தைவா­னின் முயற்­சிக்­குப் பின்­ன­டை­வாக இது பார்க்­கப்­ப­டு­கிறது. தைவா­னில் கிரு­மித்­தொற்று சம்­ப­வம் கடை­சி­யாக நவம்­பர் 5ஆம் தேதி பதி­வா­னது.