மெக்சிகோ: மெக்சிகோவில் அகதி களை அழைத்துச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் பலர் மாண்டனர்.
குவாட்டமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பலரை அகதிகளாக ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லையை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
ஆபத்தான வளைவை கடக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே
53 பேர் பரிதாபமாக உயிரிழந்தாகவும் 58 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

