நியூயார்க்: ஸூம் சந்திப்பு வழியாக 900 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டது கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்ட செய்தி. 'பெட்டர் டாட் காம்' என்னும் மின்னிலக்க அடைமான நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஷால் கார்க் (படம்), அமெரிக்காவையும் இந்தியாவையும் சேர்ந்த ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பின்னர் கடந்த வாரத் தொடக்கத்தில் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, திரு கார்க் உடனடியாக ஓய்வில் சென்றுவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'வைஸ்' இணையச் செய்தி தெரிவிக்கிறது. 'பெட்டர் டாட் காம்' அனுப்பிய மின்னஞ்சலை அது மேற்கோள் காட்டியுள்ளது. நிறுவனத்தின் அன்றாட நிகழ்வுகளை தலைமை நிதி அலுவலர் கெவின் ரயன் கவனித்துக்கொள்வார் என்று தெரிவித்ததோடு தலைமைத்துவப் பணியை மதிப்பீடு செய்ய சுயேச்சை நிறுவனம் ஒன்றை அது ஈடுபடுத்தி இருப்பதாகவும் 'வைஸ்' செய்தி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக 'பெட்டர் டாட் காம்' எதனையும் உறுதிப்படுத்த வில்லை.
பரபரப்புக்குப் பின் ஓய்வு என தகவல்
1 mins read
-

