வாஷிங்டன்: காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில், அதிக சக்திவாய்ந்த, பேரழிவை ஏற்படுத்தக்கூடிய, கொடிய சூறாவளிகள் இனி 'புதிய இயல்புநிலையாக' இருக்கும் என்று அமெரிக்க அவசரகால மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் ஆறு மாநிலங்களைப் புரட்டிப்போட்ட வரலாறு காணாத சூறாவளிக்குக் கிட்டத்தட்ட 100 பேர் மாண்டுவிட்டனர். பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
இந்நிலையில் பேசிய மத்திய அவசரகால மேலாண்மை முகமையின் தலைவர் திருவாட்டி டீன் கிறிஸ்வெல், "இதுதான் புதிய இயல்பாக இருக்கப்போகிறது.
"காலநிலை மாற்றத்தால் நாம் காணும் இந்த விளைவுகள் நம் தலைமுறையின் நெருக்கடியாகும்," என்றார்.
இவற்றால் ஏற்படக்கூடிய தாக்கங்களை எப்படி குறைப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவர், இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதில் அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால் குறித்தும் எச்சரித்தார்.

