தொற்று இருப்பதை பலர் தெரிவிப்பதில்லை: மலேசிய நிபுணர்கள் கவலை

தொற்று இருப்பதை பலர் தெரிவிப்பதில்லை: மலேசிய நிபுணர்கள் கவலை

1 mins read
0f8ef698-065f-4773-8769-f6d4f186ed14
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் சுய பரி­சோ­தனைக் கரு­வி­கள் மூலம் தங்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பதைக் கண்­ட­றி­ப­வர்­கள் அது பற்றி சுகா­தார அமைச்­சிற்­குத் தெரி­யப்­ப­டுத்­தா­மல் இருப்­ப­தாக சுகா­தார நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

சரி­யான தர­வு­கள் இல்­லா­மல் கிரு­மிப் பர­வ­லின் உண்­மை­ நிலை­மையை சுகா­தார அதி­கா­ரி­களால் தெரிந்­து­கொள்ள முடி­யாது என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்தனர்.

பினாங்­கில் தற்­போது சரா­ச­ரி­யாக 200 முதல் 300 தொற்று சம்­ப­வங்­களே பதி­வா­கின்­றன. ஆனால் இதனை தொற்று குறைந்­து­விட்­ட­தாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது என்­று பினாங்கு நலக் குழுத் தலை­வர் பீ பூன் போ சொன்­னார்.

ஏனெ­னில் சமூக அள­வில் கண்­ட­றி­யப்­படும் பல தொற்று சம்­ப­வங்­கள் சுகா­தார அமைச்­சில் பதி­வா­க­வில்லை என்­கி­றார் அவர்.

மலே­சிய மருத்­துவ சங்­கத்­தின் தலை­வர் கோ கர் சாய், "தொற்று இருப்­ப­தைக் கண்­ட­றி­ப­வர்­கள், தாமா­கவே குண­ம­டைய முற்­ப­டு­கி­றார்­கள். ஆனால் திடீ­ரென உடல்­நிலை மோச­ம­டைந்­தால் அவர்­க­ளுக்­குத் தேவை­யான மருத்­துவ உத­வி­கள் கிடைக்­கா­மல் போகக்­கூடும்," என்­றார்.

தொற்று உறு­தி­செய்­யப்­படும் பலர் மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறு­வ­தற்கு மறுத்­து­விடு­வ­தாக சொன்­னார் பேராக் பகுதி மருத்துவர் சம்சு அம்­பியா இஸ்­மா­யில். குடும்­பத்­தை­யும் நண்­பர்­களை­யும் பிரிந்திருக்க அவர்கள் விரும்­பா­தது அதற்கு கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்­றார் அவர்.

எனவே பல்­வேறு கார­ணங்­க ளுக்­காக தங்­க­ளுக்குத் தொற்று இருப்­பதை பலர் அமைச்­சி­டம் தெரி­விக்­கா­மல் இருக்­கக்­கூ­டும் என்­றும் அவர் சொன்­னார்.