நியூயார்க்: அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வகையான கொவிட்-19 தடுப்பூசிகளும் புதிய ஓமிக்ரான வகை தொற்றுக்கு எதிராகக் குறைந்த ஆற்றலைக் கொண்டிருப்பது ஆய்வுக்கூட சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் பூஸ்டர் தடுப்பூசியால் போதுமான பாதுகாப்பு கிடைக்கலாம் என்று ெசவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை கூறியது. மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை, ஹார்வர்ட் மற்றும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.
மொடர்னா, ஃபசைர்-பயோஎன்டெக், ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோரின் ரத்தத்தில் ஓமிக்ரானை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால், போதுமான பாதுகாப்பு ரத்தத்தில் இல்லை என்பது சோதனை
முடிவில் தெரியவந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.