செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b4d0c2d5-06fb-45bb-97a9-f5df61dc5092
-

சினோவேக் தடுப்பூசிக்கு ஓமிக்ரான் எதிர்ப்பாற்றல் இல்லை: ஆய்வு

ஹாங்காங்: சினோவேக் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட தடுப்பூசி ஓமிக்ரான் தொற்றைத் தணிப்பதற்குப் போதுமான நோய் எதிர்ப்புத்திறனைக் கொண்டிருக்க வில்லை என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய அந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளி யிடப்பட்டன. சினோவேக் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்ட 25 பேர் கொண்ட குழுவினரை சோதனைக்கூட ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் ஓமிக்ரானை தணிக்கும் அளவுக்கு இல்லை எனத் தெரிய வந்தது. அதேபோல ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை முழுமை யாகப் போட்டுக்கொண்ட 25 பேர் அடங்கிய மற்றொரு குழு வினரிடம் ஆய்வு நடத்தப்பட்டதில் அவர்களில் ஐவரின் ரத்தத்தில் ஓமிக்ரானை எதிர்க்கும் ஆற்றல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மலேசியா வந்த அமெரிக்கக் குழுவில் ஒருவருக்கு தொற்று

புத்­ராஜெயா: தெற்­கா­சிய பய­ணத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிலிங்­கன் குழு­வில் இட­ம்பெற்­றுள்ள ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று இருப்­பது மலே­சி­யா­வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது. அவ­ரது பெயர் விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. கோலா­லம்­பூ­ரில் திரு பிலிங்­கன் நேற்று பங்­கேற்ற நட­வ­டிக்­கை­களில் அவர் கலந்­து­கொள்­ள­வில்லை. செவ்­வாய்க்­கி­ழமை பின்­னே­ரம் கோலா­லம்­பூர் வந்­தி­றங்­கிய அவ­ரும் அவ­ரது குழு­வில் உள்ள மூத்த அதி­கா­ரி­களும் சுற்­றுப் பய­ணத்­தில் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றார்­கள். பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் தவிர மற்­ற­வர்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­பது உறு­தி­யா­ன­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­துள்­ளது.

தடுப்பூசிச் சான்றிதழ் தராதவரின் வேலையைப் பறிக்க கூகல் திட்டம்

கலி­ஃபோர்­னியா: கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான விதி­

மு­றை­களை மீறும் ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் வெட்­டப்­படும் என்­றும் தொடர்ந்து அவர்­க­ளின் வேலை பறிக்­கப்­படும் என்­றும் கூகல் நிறு­வ­னம் எச்­ச­ரித்து உள்­ள­தாக சிஎன்­பிசி தெரி­வித்­துள்­ளது. ஊழி­யர்­கள் அனை­வ­ரும் டிசம்­பர் 3ஆம் தேதிக்­குள் தங்­க­ளது தடுப்­பூ­சிச் சான்­றி­தழை பதி­வேற்­றம் செய்­ய­வேண்­டும். அல்­லது தடுப்­பூ­சி­யி­லி­ருந்து விலக்கு அளிப்­ப­தற்­கான விண்­ணப்­பத்தை அனுப்­ப­வேண்­டும் என்று கூகல் தலை­மைத்­து­வம் தனது ஊழி­யர்­க­ளுக்­குச் சுற்­ற­றிக்கை அனுப்­பி­யது.

யார் யார் சான்தழைப் பதி­வேற்­றம் செய்­துள்­ளனர், யார் யார் தடுப்­பூசி போடவில்லை போன்ற விவ­ரங்­களை அறிய தனது ஊழி­யர்­க­ளு­டன் விரை­வில் தொடர்­பு­கொள்­ளப்போவ­ தா­க­வும் அது தெரி­வித்­தது. ஜன­வரி 18க்குள் இந்த உத்­த­ர­வுக்கு இணங்­கா­த­வர்­கள் 30 நாள்­க­ளுக்கு சம்­ப­ளத்­து­ட­னான கட்­டாய விடுப்­பில் வைக்கப்படுவர். பின்­னர் ஆறு மாதங்­க­ளுக்கு சம்­ப­ள­மில்­லாத விடுப்­பும் தொடர்ந்து வேலை­நீக்­க­மும் இடம்­பெ­றும் என்று கூக­லின் ஆவ­ணத்­தைச் சுட்­டிக்­காட்டி சிஎன்­பிசி கூறி­யுள்­ளது.

பிரிட்டிஷ் பிரதமருக்கு கடும் எதிர்ப்பு

லண்டன்: ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையை அமல்படுத்து வதில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்தது முதல் பலத்த எதிர்ப்பை அவர் நாடாளுமன்றத்தில் சந்தித்து உள்ளார். புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியினரே திரண்டுள்ளதால் திரு ஜான்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆளும் பழமைவாதக் கட்சியின் சுமார் 100 எம்.பி.க்கள் பிரதமரின் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆளும் தரப்பின ரின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

தடுப்பூசி எதிர்ப்பு, கொலைத் திட்டம்

பெர்லின்: கிழக்கு ஜெர்மன் மாநில முதல்வரைக் கொலை செய்ய தடுப்பூசி எதிர்ப்பு இயக்கத்தினர் திட்டம் தீட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி காவல் துறை தெரிவித்துள்ளது. கட்டாயத் தடுப்பூசித் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வருவதா கவும் அது கூறியது. 'டெலிகிராம்' சமூக ஊடகக் குழு ஒன்றில் இடம்பெற்றுள்ள ஐவரைக் குறிவைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலைத் திட்டம் அம்பலமானதாக காவல் துறை மேலும் கூறியுள்ளது.