மணிலா: பிலிப்பீன்சில் முதல்முறையாக இருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த இருவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் பிலிப்பீன்ஸ் சுகாதாரத் துறை நேற்று கூறியது. அவர்களில் ஒருவர் ஜப்பானிலிருந்து நாடு திரும்பிய பிலிப்பீன்ஸ் குடி
மகன். டிசம்பர் 1ஆம் தேதி அவர் மணிலா வந்திறங்கியதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்று கூறியது.
மற்றவர் நைஜீரியாவிலிருந்து நவம்பர் 30ஆம் தேதி வந்தவர். இருவரிடமும் தொற்றுக்கான அறிகுறி காணப்படவில்லை எனவும் அவர்கள் தடைகாப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது.

