தென்கொரியாவில் மீண்டும் கட்டுப்பாடு

தென்கொரியாவில் மீண்டும் கட்டுப்பாடு

1 mins read
d22a23b3-7bf5-414e-8b31-db5fbbf70cba
-

சோல்: தென்­கொ­ரி­யா­வில் கொரேனா தொற்று மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளது. அதை­ய­டுத்து அந்­நாட்­டில் தளர்த்­தப்­பட்ட பாது­காப்பு இடை­வெ­ளிக் கட்­டுப்­பா­டு­களை அதி­கா­ரி­கள் மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

'தொற்­றோடு வாழ்­வோம்' என்று அந்­நாடு, பாது­காப்பு இடை­வெளி போன்ற தொற்­றுக் கட்­டுப்­பா­டு­களை ஒன்­றரை மாதத்­திற்கு முன்­னர் தளர்த்­தி­யது.

ஆனால், இப்­போது புதி­தாக முளைத்­துள்ள ஓமிக்­ரான் வகை உரு­மா­றிய கொரோனா அச்­சு­றுத்­த­லா­லும் அதி­க­ரிக்­கும் அன்­றா­டத் தொற்று கார­ண­மா­க­வும் அந்­தத் தளர்வு மீட்­டுக்கொள்­ளப்­பட்­டது. அதன்­படி ஐந்து அல்­லது அதற்கு மேற்­பட்­டோர் ஒன்­று­கூட தடை­விதிக்­கப்­ப­டு­கிறது. உண­வ­கங்­கள், இரவுநேர கேளிக்கை விடு­தி­கள் இரவு 9 மணிக்­குள் மூடப்­பட வேண்­டும்.

புதிய கட்­டுப்­பாடு நாளை முதல் ஜன­வரி 2ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும். நேற்று 6 மணி நில­வ­ரப்­படி அங்கு அன்­றா­டத் தொற்று 7,622 ஆக பதி­வா­னது. இவர்­களில் 148 பேருக்கு ஓமிக்­ரான் உரு­மா­றிய கிருமி தொற்­றி­யுள்­ளது. மேலும் 62 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளது. இங்கு 81 விழுக்­காட்டு மக்­கள் இரண்டு அல்­லது மூன்று முறை தடுப்­பூசி போட்­டுள்­ள­னர்.