வெலிங்டன்: நியூசிலாந்தில் 90 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்நாட்டில் தொற்றுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளதால் கொரோனா பரவலும் கட்டுப்பாட்டில் உள்ளது.
கிருமித்தொற்று குறைந்தும் ஏன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை என்று மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நேற்று நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி போராட்டத்தில் இறங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவில்லை. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிச் சென்று அங்கு முற்றுகையிட்டனர்.