வறுமையில் பிலிப்பீன்ஸ் மக்கள்

வறுமையில் பிலிப்பீன்ஸ் மக்கள்

2 mins read
dd9d5b46-6c17-4035-bae1-0a0204b4cec8
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சேரிப் பகுதி. படம்: ராய்ட்டர்ஸ் -

மணிலா: பிலிப்­பீன்­ஸில் இவ்­வாண்டு முற்­பா­தி­யில் மட்­டும் கிட்­டத்­தட்ட நான்கு மில்­லி­யன் மக்­கள் வறுமையில் தள்­ளப்­பட்­டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட விதி­முறை­க­ளால் வேலை வாய்ப்­பு­கள் குறைந்­த­தும் உள்­ளூர் பொருள்­களுக்­கான தேவை குறைந்­த­தும் இதற்­குக் கார­ணங்­கள் என்று அர­சாங்க அதி­கா­ரி­கள் கூறுகின்றனர்.

இவ்­வாண்டு முற்­பா­தி­யில் பிலிப்­பீன்­ஸில் வறு­மையில் தள்­ளப்­பட்­டோ­ரின் விகி­தம் 23.7 விழுக்­காட்­டுக்கு அதி­க­ரித்­தது. மூவாண்­டு­களுக்கு முன் இதே கால­கட்­டத்­தில் இவ்­வி­கி­தம் 21.1 விழுக்­கா­டாக இருந்­தது. அப்­ப­டி­யென்­றால் ஏற்­கெ­னவே இருந்­த­தை­விட கூடு­த­லாக சுமார் 3.9 மில்­லி­யன் மக்­கள் வறுமையில் தள்­ளப்­பட்­டுள்­ள­னர் என்று பொருள். இந்­தப் புள்ளி விவ­ரங்­கள் மூவாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை வெளி­யி­டப்­படும்.

"கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் சூழல் எங்­க­ளின் முன்­னேற்­றத்­தைத் தற்­கா­லி­க­மா­கத் தடுத்­தது. 2020ஆம் ஆண்­டில் மக்­க­ளின் வரு­மா­ன­மும் வேலை­களும் கட்­டுப்­பா­டு­க­ளால் பெரி­தும் பாதிக்­கப்­பட்டன," என்று பிலிப்­பீன்­ஸின் பொரு­ளி­யல் திட்­டங்­களுக்கான அமைச்­சர் கார்ல் ஹெண்ட்­ரிக் சுவா செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்றில் கூறி­னார்.

கொவிட்-19 தலை­தூக்­கு­வ­தற்கு முன்பு ஆசி­யா­வில் ஆக வேக­மாக வள­ரும் பொரு­ளி­யல் நாடு­களில் ஒன்­றாக பிலிப்­பீன்ஸ் இருந்­தது. ஆனால், சென்ற ஆண்டு வர­லாறு காணாத வகை­யில் இதன் பொரு­ளி­யல் 9.6 விழுக்­காடு சுருங்­கியது. கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் வர்த்­த­கங்­க­ளை முடக்­கிப் போட்­டன. மேலும், குடும்­பங்­கள் செல­வ­ழிப்­ப­தும் குறைந்­தது. இது, பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு முக்­கி­ய­மான ஓர் அம்­சம்.

எனி­னும், அண்­மைக் கால­மாக பிலிப்­பீன்­ஸில் கிரு­மிப் பர­வல் சூழல் கட்­டுக்­குள் வந்­துள்­ளது. பல வர்த்­த­கங்­கள் மீண்­டும் இயங்­கி­வ­ரு­வதா­க­வும் கூடு­த­லா­னோர் வேலைக்­குத் திரும்­பி­யி­ருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. "2021ஆம் ஆண்­டின் பிற்­பா­தி­யில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­பட்டு கூடு­த­லா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடு­வ­தால் பொரு­ளி­யல் வளர்ச்சி வலு­வ­டை­கிறது, வறுமை விகி­தம் குறை­யும் என எதிர்­பார்க்­க­லாம்," என்று திரு சுவா குறிப்­பிட்­டார்.

கொள்ளைநோய்ப் பரவல் சூழலால் மில்லியன்கணக்கானோர் அவதிப்படுகின்றனர்