மலேசியா: பெரிய கொண்டாட்டங்களுக்குத் தடை

மலேசியா: பெரிய கொண்டாட்டங்களுக்குத் தடை

1 mins read
985cf3ea-c933-4a1f-9959-39b6e3ce7bea
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்று அச்­சம் நில­வு­வ­தால் அங்கு பெரிய அள­வி­லான புத்­தாண்டு கொண்­டாட்­டங்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தெரி­வித்­துள்­ளார். ஆகக் கடைசி நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் இரண்­டா­வ­தாக ஒரு­வர் ஓமிக்­ரான் வகை கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ளார்.

தனிப்­பட்ட முறை­யில் சிறிய புத்­தாண்டு, கிறிஸ்­மஸ் ஒன்­று­கூ­டல்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­படும் என்று திரு கைரி கூறி­னார். குடும்­பத்­தார், நண்­பர்­கள் ஆகி­யோ­ரு­ட­னான கொண்­டாட்­டங்­க­ளுக்கு அனு­மதி உண்டு. எனி­னும், அவற்­றில் கலந்­து­கொள்ள கொவிட்-19 பரி­சோ­த­னை­களை மேற்­கெள்­ள­வேண்­டும் என்று திரு கைரி நாடா­ளு­மன்­றத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சொன்­னார்.