சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பிரபல பாடகி டேலர் சுவிஃப்ட்டின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோரை அடையாளம் காண அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் மதுக்கூடங்களிலும் இரவு கேளிக்கை கூடங்களிலும் பாதுகாப்பு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இத்தகைய இடங்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துவந்துள்ளன. எனினும், கொவிட்-19 சூழலில் புதிய கட்டத்தை நோக்கி ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருப்பதாகக் கூறிய அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன், முடக்கநிலையை இனி நடைமுறைப்படுத்தப்போதில்லை என்று குறிப்பிட்டார்.

