ஷங்ஹாய்: சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நிலக்கரி யிலிருந்து வரும் எரிசக்தி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் உலகளவில் அதற்கான தேவை இவ்வாண்டு வரலாறு காணாத அளவில் பதிவாகலாம் என்று 'ஐஈஏ' எனும் அனைத்துலக எரிசக்தி அமைப்பு கூறியுள்ளது.
இதனால் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிக்கு இடையூறு வரலாம் என்று அது குறிப்பிட்டது.
பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிற்கு இணங்க சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் இலக்கை அடைய எண்ணெய், கரி போன்றவற்றுக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பது இவ்வாண்டு நிறுத்தப்படவேண்டும் என்று கடந்த மே மாதம் அமைப்பு கூறியது.

