தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலக்கரி சுரங்கத்தில் 21 பேர் சிக்கினர்

1 mins read
74772bda-68b6-46b8-b6ec-c2b06b7c629a
சுரங்கத்தில்சிக்கியோரைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: சீனா­வின் சியாவ்யி நக­ரில் உள்ள நிலக்­கரி சுரங்­கத்­தில் சிக்­கி­யிருக்கும் 21 ஊழி­யர்­களை மீட்­கும் பணி­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று சட்­ட­வி­ரோ­த­மா­கச் செயல்­பட்­டு­வந்த இந்த சு­ரங்­கத்­தில் வெள்­ளம் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து சுரங்க ஊழியர்­கள் மாட்­டிக்­கொண்­ட­னர். நூற்­றுக்­க­ணக்­கான பணி­யா­ளர்­கள் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

சட்­ட­வி­ரோ­த­மாக நிலத்­தைத் தோண்­டும் நட­வ­டிக்­கை­களை முறி­ய­டிக்­கப்­போ­வ­தாக அதி­கா­ரி­கள் வாக்­கு­றுதி கொடுத்­துள்­ள­னர். கரிக்­கான விலை கூடி­யுள்­ள­தால் சட்­ட­வி­ரோ­த­மாக தோண்­டும் நட­வ­டிக்­கை­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இச்­சம்­ப­வத்­தின் தொடர்­பில் இது­வரை ஏழு பேர் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.