பிரெஞ்சு பிரதமர்: ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவுகிறது

பிரெஞ்சு பிரதமர்: ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவுகிறது

2 mins read
39987178-e5d4-4558-b4ac-189d05b57dab
-

பாரிஸ்: ஐரோப்­பா­வில் ஓமிக்­ரான் கிருமி 'மின்­னல் வேகத்­தில் பரவி வரு­வ­தாக' பிரெஞ்சு பிர­த­மர் ஜீன் காஸ்­டெக்ஸ் எச்­ச­ரித்­துள்­ளார்.

அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் பிரான்­சில் ஆதிக்­கம் செலுத்­தும் உரு­மா­றி­ய தொற்­றாக ஓமிக்­ரான் அமை­யக்­கூ­டும் என்று அவர் கூறி­னார்.

அண்டை நாடான பிரிட்­ட­னில் இருந்து வரு­வோ­ருக்கு பிரான்ஸ் கடு­மை­யான பய­ணக் கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது. அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வரு­வ­தற்கு ஒரு சில மணி நேரத்­துக்கு முன்பு பிரெஞ்சு பிர­த­மர் ஓமிக்­ரான் தொற்று குறித்து எச்­ச­ரித்­தார்.

ஓமிக்­ரான் தொற்று கார­ண­மாக ஐரோப்­பா­வி­லேயே ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு பிரிட்­டன். வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று அங்கு கிட்­டத்­தட்ட 15,000 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறு­தி­யா­னது.

பிரான்­சில் தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்ள தொற்று சம்­ப­வங்­களில் 10 விழுக்­காடு வரை ஓமிக்­ரான் உரு­மா­றிய தொற்­றாக இருக்­கக்­கூ­டும் என்று அதன் சுகா­தார அமைச்­சர் ஆலி­வர் வேரன் சொன்­னார்.

இதை­ய­டுத்து, புத்­தாண்டு கொண்­டாட்ட நிகழ்ச்­சி­களும் வாண­வே­டிக்­கை­யும் பிரான்­சில் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், மற்­றொரு கிரு­மித்­தொற்று அலைக்கு ஐரோப்­பிய நாடு­கள் தயா­ராகி வரு­கின்­றன.

தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த ஜெர்­மனி, நெதர்­லாந்து, அயர்­லாந்து ஆகிய நாடு­களில் மேலும் சில கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன.

இது­வரை சந்­திக்­காத சவால் ஒன்­றுக்கு ஜெர்­மனி தயா­ராக வேண்­டும் என்று அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது கூறி­னார்.

இதற்­கி­டையே, தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த நெதர்­லாந்து மீண்­டும் முடக்­கப்­பட வேண்­டும் என்று அந்­நாட்டு சுகா­தார நிபு­ணர்­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

கிறிஸ்­ம­ஸுக்­குப் பிறகு பிரிட்­ட­னும் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடுமை யாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. உள்­புற இடங்­களில் மக்­கள் ஒன்­று­கூ­டு­வ­தற்கு இரண்டு வார காலத் தடை விதிப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தாக பெயர் கூற விரும்­பாத தக­வலை மேற்­கோள்­காட்டி டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கட்­டுப்­பா­டு­கள் கொண்­டு­வ­ரப்­படவில்லை என்­றால், நாளொன்­றுக்கு 3,000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­படும் நிலை ஏற்­படும் என்­கின்­ற­னர் அர­சாங்க ஆலோசகர்கள்.