ஆஸ்திரேலியா: தொடர்ந்து 3வது நாளாக புதிய உச்சம்

ஆஸ்திரேலியா: தொடர்ந்து 3வது நாளாக புதிய உச்சம்

1 mins read
ef22d353-51ca-4962-9cd8-c05856db254e
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கிரு­மி ­தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து மூன்­றா­வது நாளாக புதிய உச்­சத்தை (4,017) எட்­டி­யது. முந்திய நாள் இது 3,820ஆக இருந்தது.

இருப்­பி­னும் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தும் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து செயல்­ப­டுத்தி வரு­கி­றார் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன்.

நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று 2,482 பேரைக் கிரு­மி தொற்றி­யது. அங்கு பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் இது.

இவற்­றில் பெரும்­பா­லான தொற்று சம்­ப­வங்­கள் ஓமிக்­ரான் கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்று அம்­மா­நில சுகா­தார அதி­கா­ரி­கள் கூறி­னர்.

விக்­டோ­ரி­யா­வில் நேற்று 1,504 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. 84 பேர் தீவிர சிகிச்சை பிரி­வில் உள்­ள­னர்.

"தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யை­விட தீவிர சிகிச்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­படு­வோ­ரின் எண்­ணிக்­கை­யில்­தான் இனி கவ­னம் செலுத்­த­வேண்­டும்.

"26 பேர் மட்­டுமே தீவிர சிகிச்சை பிரி­வில் உள்­ள­தால் நியூ சவுத் வேல்ஸ் மருத்­து­வ­ம­னை­களில் நெருக்­கடி இல்லை," என்­றார் மோரிசன்.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் மள­ம­ள­வென அதி­க­ரித்து வரும் பிரிட்­டன், ஐரோப்­பிய நாடு­களில் நில­வும் சூழ்­நிலை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இல்லை என­வும் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, சிட்னி, மெல்­பர்ன் செல்­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனைத்­து­லக பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­இல்லை என்று நேற்று முன்­தி­னம் அறி­விக்கப்பட்டது.