கிருமி தொற்றிய கைதிகளைத் தனிமைப்படுத்த கோரி சிறைச்சாலைக்குத் தீ வைப்பு

கிருமி தொற்றிய கைதிகளைத் தனிமைப்படுத்த கோரி சிறைச்சாலைக்குத் தீ வைப்பு

1 mins read
ae9e2240-e21b-4b71-84d7-b1baff9d2aa7
தீச்சம்பவம் காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சிறை அதிகாரி ஒருவர் சொன்னார். படம்: ஏஎஃப்பி -

பேங்­காக்: தாய்­லாந்து சிறை­யில் இரண்டு நாள்­க­ளாக நீடித்த வன்­மு­றையைத் தொடர்ந்து கைதி­கள் சிறைச்­சா­லைக்­குத் தீ வைத்­த­னர்.

கூட்­ட­நெ­ரி­சல் மிக்க தாய்­லாந்து சிறைச்­சா­லை­கள் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த போராடி வரு­கின்­றன.

இது­வரை 87,000க்கும் மேற்­பட்ட சிறை­க்கை­தி­க­ளுக்­கு கிரு­மி தொற்றியுள்­ள­தா­க­வும் 185 கைதி­கள் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­தா­க­வும் சிறைத் துறை தக­வல்­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில், தொற்­றுக்கு ஆளான கைதி­க­ளைத் தனி­மைப்­படுத்­தக் கோரி சென்ற வியா­ழக்­கி­ழமை இரவு முதல் கிரா­பி­யில் உள்ள சிறைச்­சா­லையின் 400 கைதிகள் வன்­மு­றை­யில் ஈடு­ப­ட்டு வந்தனர்.

இதைத்­தொ­டர்ந்து வெள்­ளிக்­கி­ழமை இரவு கைதி­கள் தங்­கள் படுக்­கை­க­ளுக்­குத் தீ வைத்­த­னர். இது­தொ­டர்­பாக 31 பேர் கைது செய்­யப்­பட்டு அதிக காவல் உள்ள சிறைக்கு மாற்­றப்­பட்­ட­னர்.

குறிப்­பிட்ட அச்­சி­றை­யில் உள்ள 2,100க்கும் மேற்­பட்ட கைதி­களில் 300 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.