நெதர்லாந்து மீண்டும் முடங்கியது

நெதர்லாந்து மீண்டும் முடங்கியது

2 mins read
7a4b9af6-a63d-4c3b-8aab-8493f3e0f832
-

தி ஹேக்: ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் ஐரோப்­பிய நாடு­கள் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்கி வரு­கின்­றன.

அந்த வகை­யில் ஐரோப்­பா­வில் முதல் நாடாக நெதர்­லாந்து நேற்று முதல் முழு முடக்­க­நி­லையைக் கொண்டு வந்­தது.

ஜன­வரி 14ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும் இந்த முடக்­க­நி­லை­யின்­போது அத்­தி­யா­வ­சி­ய­மற்ற கடை­கள், மது­பா­னக்­கூ­டங்­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள், வெளிப்புற விளை­யாட்­டு­கள் ஆகி­யவை மூடப்­பட்­டி­ருக்­கும். பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்கு விடு­முறை அளிக்­கப்­பட்டு

உள்­ளது.

"விடு­முறை காலத்­தில் முடக்­க­நிலை என்­பது அனை­வ­ருக்­கும் கடி­ன­மான ஒன்­றாக இருக்­கும் என்று தெரி­யும். நிலைமை மிக­வும் மோச­ம­டை­வ­தைத் தவிர்க்க வேண்டு­மா­னால் இந்­ந­ட­வ­டிக்கை அவ­சி­யம்.

"இல்­லை­யென்­றால் ஜன­வரி மாதத்­தில் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும்," என்­றார் நெதர்­லாந்து பிர­த­மர் மார்ட் ரூட்.

நெதர்­லாந்­தைத் தவிர வேறு சில ஐரோப்­பிய நாடு­களும் பொது இடங்­களை மூடி­யுள்­ளன. சில நாடு­கள் பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளன.

கூடு­தல் தடுப்­பூசி போடாத பய­ணி­க­ளுக்கு ஆஸ்­தி­ரியா கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளது.

டென்­மார்க்­கில் திரை­ய­ரங்­கு­கள், பொழு­து­போக்குப் பூங்­காக்­கள் மூடப்­பட்­டன.

இதற்­கி­டையே, பிரிட்­டனை அதிக ஆபத்து மிக்க நாடு­கள் பட்­டி­ய­லில் சேர்த்­துள்­ளது ஜெர்­மனி.

எனவே பிரிட்­ட­னில் இருந்து ஜெர்­மனி செல்­வோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தா­லும் இரண்டு வாரத்­திற்­குத் தனி­மைப்­படுத்­தப்­ப­டு­வர். அத்­து­டன் ஜெர்மனியை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்­கள் மட்­டுமே பிரிட்­ட­னில் இருந்து ஜெர்­மனி செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

பிரிட்­ட­னில் நேற்று மேலும் 90,418 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

ஒரே நாளில் அங்கு ஓமிக்­ரான் சம்­ப­வங்­களும் இரண்டு மடங்­கிற்கு மேல் அதி­க­ரித்­துள்­ளது.

வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி, அங்கு ஒட்­டு­மொத்­த­மாக 25,000 பேர் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருந்­த­னர். முந்­திய நாள் இது 10,000மாக இருந்­தது. 1.5 முதல் 3 நாட்­களில் ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள் இரட்­டிப்­பா­வ­தாக உல­கச் சுகா­தார நிறு­வ­னம் கூறி­யது குறிப்­பி­டத்­தக்கது.

ஓமிக்­ரான் இருப்­ப­தாக நம்­பப்­படு­வோர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வது 85 விழுக்­காடாக அதி­க­ரித்­துள்­ளது.

மேலும் அத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் என்று நம்­பப்­படும் ஏழு பேர் மாண்­டு­விட்­ட­தாக அர­சாங்க தகவல்­கள் கூறு­கின்­றன.

இதற்­கி­டையே, புதிய கட்­டுப்­பா­டு­கள் தவிர்க்­க­மு­டி­யா­தவை என்று கூறி­யுள்­ளார் லண்­டன் மேயர் சாதிக் கான். இல்­லை­யென்­றால் மருத்­துவ சேவை­கள் நிலை­கு­லைந்து போகக்­கூ­டும் என்­றார் அவர்.