'அடுத்த மலேசியத் தேர்தலில் கபுங்கன் சரவாக் கூட்டணி முக்கிய சக்தியாக திகழும்' சரவாக் தேர்தலில் ஜிபிஎஸ் கூட்டணி சாதனை வெற்றி

'அடுத்த மலேசியத் தேர்தலில் கபுங்கன் சரவாக் கூட்டணி முக்கிய சக்தியாக திகழும்' சரவாக் தேர்தலில் ஜிபிஎஸ் கூட்டணி சாதனை வெற்றி

1 mins read
c76e1121-19d5-4ad3-89e3-a5d8b6b655b4
-

கோலா­லம்­பூர்: சர­வாக் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 'ஜிபி­எஸ்' எனும் கபுங்­கன் சர­வாக் கூட்­டணி சாதனை வெற்றி பெற்­றுள்­ளது.

இத­னைத் தொடர்ந்து அடுத்த மலே­சிய அர­சாங்­கத்­தைத் தீர்­மா­னிக்­கும் முக்­கிய சக்­தி­யாக அக்­கூட்­டணி உரு­வெ­டுத்­துள்­ள­தாக அர­சி­யல் கவனிப்­பாளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

தற்­போ­தைய மலே­சிய நாடாளுமன்றத்தில் ஜிபி­எஸ் கூட்­ட­ணி­யின் 18 உறுப்­பி­னர்­கள் அங்­கம் வகிக்­கின்­ற­னர்.

அடுத்த பொதுத் தேர்­த­லில் சர­வாக்­கின் 31 நாடா­ளு­மன்ற தொகு­தி­களில் ஜிபி­எஸ் கூட்­டணி அதிக இடங்­க­ளைக் கைப்­பற்­றும் பட்­சத்­தில் மேலும் அதிக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட கட்சி­யாக அது இருக்­கும்.

அதற்­கான சாத்­தி­யம் உள்­ளதை நடந்து முடிந்த அம்­மா­நில சட்­ட­மன்­றத் தேர்­த­லின் முடி­வு­கள் காட்­டு­கின்­றன.

இன்­னும் 17 மாதங்­களில் நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லில் யாரும் பெரும்­பான்மை வெற்றி பெறா­விட்­டால், சர­வாக் கட்­சி­க­ளின் கூட்­டணி அதை எளி­தில் தீர்­மா­னிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

2016ஆம் ஆண்டு நடந்த சர­வாக் தேர்­த­லில் 72 இடங்­களை மட்­டுமே வென்ற ஜிபி­எஸ் கூட்டணி நேற்று முன்­தி­னம் நடந்த தேர்­த­லில் 82ல் 75 தொகுதி­களைக் கைப்­பற்­றி­யது.

எதிர்க்­கட்­சி­யான பிஎஸ்பி 4 தொகு­தி­க­ளி­லும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி சார்­பில் போட்­டி­யிட்ட ஜசெக 2 தொகு­தி­க­ளி­லும் வெற்றி பெற்­றி­ருக்கின்றன. பிகேஆர் கட்­சிக்கு ஒரு தொகு­தி­கூட கிடைக்­க­வில்லை.

அதே போல, பக்­கத்­தான் கூட்­டணி சார்­பாக போட்­டி­யிட்ட அமனா கட்­சி­யும் எந்­தத் தொகு­தி­யி­லும் வெற்றி பெற­வில்லை.