பேங்காக்: வெளிநாட்டுப் பயணிகளை மீண்டும் தனிமைப்படுத்துவது குறித்து தாய்லாந்து ஆலோசித்துவருகிறது. ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் குறித்த அச்சம் நிலவுவதையொட்டி தாய்லாந்து இவ்வாறு செயல்படுகிறது. அந்நாட்டில் முதன்முறையாக உள்ளூரில் ஒருவருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை நேற்று அதன் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணி களையும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு இந்த நிபந்தனை அகற்றப்பட்டிருந்தது.
தாய்லாந்து சென்ற மாதம் மீண்டும் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டது. அதற்குமுன் சுமார் 18 மாதங்களுக்கு அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தன.
தாய்லாந்தில் இதுவரை 63 பேருக்கு ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் 62 பேர் வெளிநாடுகளிலிருந்து தாய்லாந்து வந்த பயணிகள்.
சுற்றுப்பயணத்துறையைப் பெரிதும் நம்பியிருக்கும் நாடு தாய்லாந்து. கொவிட்-19 சூழலால் முடங்கிப்போன அந்தத் துறை அண்மைக் காலமாக மீண்டுவரத் தொடங்கியது.

