பிலிப்பீன்ஸ் சூறாவளியில் நூற்றுக்கணக்கானோர் மரணம்

பிலிப்பீன்ஸ் சூறாவளியில் நூற்றுக்கணக்கானோர் மரணம்

1 mins read
77b28679-d4e4-473e-b741-60e2e48a4350
-

மணிலா: பிலிப்­பீன்­ஸைத் தாக்­கிய ராய் சூறா­வ­ளி­யில் குறைந்­தது 208 பேர் மாண்­டு­விட்­ட­தாக அந்­நாட்­டின் தேசிய காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர். பிலிப்­பீன்­ஸின் தெற்கு, மத்­தி­யப் பகுதி­களில் இந்­தச் சூறா­வளி பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. குறைந்­தது 239 பேர் காய­ம­டைந்­த­னர், 52 பேரைக் காண­வில்லை. 300,000க்கும் அதி­க­மானோர் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றி­னர்.

பிலிப்­பீன்ஸ் இவ்­வாண்டு எதிர்­கொண்­ட ஆக மோச­மான சூறா­வ­ளி­யான ராய், கட்­ட­டங்­க­ளின் கூரை­களைக் கிழித்து எறிந்­தது, மரங்­களை வேரு­டன் சாய்த்தது, மரக்­கட்­டை­ வீடு­களை சுக்­கு­நூ­றாக்­கி­யது, கிரா­மங்­களில் வெள்­ளத்தை ஏற்­ப­டுத்­தி­யது.