ஆஸ்திரேலியாவில் அவசர ஆலோசனை

ஆஸ்திரேலியாவில் அவசர ஆலோசனை

2 mins read
e647bf0a-d0d9-44cf-91c8-eb6a050c96f5
சிட்னியில் வாகனமோட்டிகளுக்காக அமைக்கப்பட்ட முகாமில் மருத்துவ உதவியாளர் ஒருவர், கொவிட்-19 சோதனை செய்கிறார். படம்: ஏஎஃப்பி -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஓமிக்­ரான் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் அமல் படுத்த வேண்­டும் என்ற அைற கூ­வல் எழுந்­துள்­ளது.

இது பற்றி விவா­திக்க மாநில அர­சு­க­ளு­டன் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் அவ­ச­ரக் கூட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­துள்­ளார்.

எளி­தில் பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் கிரு­மி­யால் நாட்­டில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் வெகு­வாக அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜன­வரி பிற்பாதியில் பிப்­ர­வரி முற்­ப­கு­தி­யில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் 200,000ஐ தொடும் என்று டேஹெர்டி கழ­கத்­தின் பகுப்­பாய்வு கூறு­கிறது.

இது, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஒட்டு மொத்த மக்­கள் தொகை­யில் ஒரு விழுக்­கா­டா­கும்.

கூடு­தல் தடுப்­பூ­சி­கள் மட்­டுமே அதி­வே­கத்­தில் பர­வும் ஓமிக்­ரா­னைத்­த­டுத்து நிறுத்த முடி­யாது என்று அந்­தக் கழ­கம் கூறி­யது.

மக்­கள்­தொகை அதி­க­முள்ள நியூ சவூத் வேல்ஸ் மாநி­லத்­தில் நேற்று உள்­ளூ­ரில் 3,057 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இந்த மாநி­லத்­தில் மூன்று அல்­லது நான்கு நாட்­க­ளுக்கு ஒரு­முறை தொற்று எண்­ணிக்கை இரட்­டிப்­பாகி வரு­கிறது.

ஆஸ்­தி­ரே­லியா, முந்­தைய தொற்­றுச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்படுத்­தி­யி­ருந்­தா­லும் தற்­போ­தைய ஓமிக்­ரான் கிருமி புதிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வே­ளை­யில் அடுத்த சில நாட்­களில் விடு­மு­றைக் காலம் தொடங்­கு­கிறது.

அண்­மை­யில் மாநில எல்­லை­கள் திறக்­கப்­பட்டு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் விடு­மு­றைக்குத் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

அவர்­கள் மாநி­லங்­க­ளுக்கு இடையே பய­ணங்­களை மேற்­கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர்.

நாடு முழு­வ­தும் கிறிஸ்­மஸ் விருந்­து­களும் களை­கட்­டத் தொடங்­கி­யுள்­ளன.

இந்த நிலை­யில் ஓமிக்­ரான் புதிய அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இத­னால் கட்­டாய முகக்­க­வ­சம் உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் அமல்­ப­டுத்த வேண்­டும் என்று சுகா­தார நிபு­ணர்­கள் அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

ஆஸ்­தி­ரே­லிய மருத்­து­வர்­கள், ஓமிக்­ரான் தொற்று அதி­க­ரித்­துள்ள மாநி­லங்­களில் கட்­டா­யச் சோதனை, முகக் கவ­சம், ஓன்­று­கூட வரம்பு உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும் என்று கூறி­யுள்­ள­னர். ஆனால் சில அர­சி­யல்­வா­தி­கள் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.