லண்டன்: தம்முடைய முன்னாள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் 550 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (S$994மி.) வழங்க துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு லண்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
விவாகரத்து தொடர்பில் செலுத்தப்படும் ஆகப்பெரிய தொகை இது என நம்பப்படுகிறது.
துபாய் ஆட்சியாளரான 72 வயது ஷேக் முகமதுக்கும் அவருடைய 47 வயது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பிந்த் அல் ஹுசேனுக்கும் இடையே சட்டரீதியாக நீண்டநாள் மோதல் ஏற்பட்டது.
தம்முடைய இரு பிள்ளை களுடன் இளவரசி ஹயா, லண்டனில் வசித்து வருகிறார். அவருடைய பிள்ளைகளுக்கு 13 மற்றும் ஒன்பது வயதாகிறது.
இளவரசி ஹயா, ஜோர்தான் மாமன்னர் அப்துல்லாவின் ஒன்று விட்ட சகோதரியாவார்.
இளவரசி ஹயா 2004ல் மணந்தார் ஷேக் முகமது. அது, ஷேக் முகமதின் இரண்டாவது அதிகாரபூர்வ திருமணமாகும்.
ஷரியா சட்டத்தின்கீழ் 2019ல் இளவரசி ஹயாவுக்குத் தெரியாமல் அவரை ஷேக் முகமது விவாகாரத்து செய்ததாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

