தாமதமாகும் உதவி: மலேசிய மக்கள் அதிருப்தி

தாமதமாகும் உதவி: மலேசிய மக்கள் அதிருப்தி

2 mins read
5541f65e-f844-4a96-917b-22c62066b3a2
சிலாங்கூரின் ‌ஷா ஆலம் பகுதியில் வசிக்கும் மக்கள் நடந்து சென்று வெள்ள நீரைக் கடந்தனர். படம்: ஏஎஃப்பி -

கிள்­ளாங்: தனது குடும்­பம் வெள்­ளத்­தில் சிக்­கித் தவித்­த­போது வெளி­நாட்­டி­னரே தங்­க­ளுக்கு உத­வி­ய­தா­க­வும் அர­சாங்­கத் துறை­யி­னர் யாரும் உத­விக்கு வர­வில்லை என்­றும் மலே­சி­யா­வின் கோல லங்காட் பகு­தி­யைச் சேர்ந்த பெண்­மணி ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த இடத்­திற்­குச் சென்­றி­ருந்த தொழில் முனை­வோர் மேம்­பாட்டு, ஒத்­து­ழைப்பு அமைச்­சர் நோர் ஒமாரி­டம் அந்த பெண்­மணி கூறும் காணொளி இணை­யத்­தில் வலம் வரு­கின்­றன.

"நாங்­கள் நெருக்­க­டி­யில் இருந்­த­போது அர­சுத் துறை­யி­னர் யாரும் உத­விக்கு வர­வில்லை. வெள்ள நீர் வடிந்த பிற­கு­தான் அவர்­கள் வந்­த­னர். அதற்கு பிறகு ஏன் வர­வேண்­டும்," என்று நோர் ஒமா­ரி­டம் கேள்வி கேட்­டார்.

வெள்­ளம் அதி­க­மாக இருந்­த­போது குடிமை தற்­காப்­புப் படை­யி­னர் மட்­டுமே அங்கு காணப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

தான் உட்­பட ஒரு வீட்­டின் கூரை­யில் குழந்­தை­க­ளு­டன் சிக்­கித் தவித்­த­வர்­க­ளைப் பட­கில் வந்த மூன்று இந்­தோ­னீ­சிய ஆட­வர்­கள் மீட்­ட­தாக அவர் சொன்­னார்.

அப்­ப­கு­தி­யில் வீட்­டிற்­குள் சிக்­கித் தவித்த பல­ரைக் காப்­பாற்­று­வ­தற்­காக அவர்­கள் அதி­காலை வரை பாடு­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, வெள்­ளத்­தால் பெரி­தும் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் போது­மான ஒருங்­கி­ணைப்பு இல்லை என்­றார் மனி­தா­பி­மான ஆர்­வ­ல­ரும் மெர்சி மலே­சியா அமைப்­பின் நிறு­வ­னரு­மான டாக்­டர் ஜெமிலா மஹ்­மூத்.

பாது­காப்பு மையங்­க­ளைப் பார்­வை­யிட்ட அவர், குழு­வா­க­வும் தனித்­தும் செயல்­படும் தன்­னார்­வ­லர்­கள் அற்­பு­த­மான பணி­களை மேற்­கொண்­டுள்­ள­தாக அவர் சொன்­னார்.

வெள்­ளம் வடிந்த பிறகு பலருக்குத் தங்­களது கைபேசி கிடைத்­தா­லும் அதைச் சரி செய்­வ­தற்­கான பணம் இல்­லா­மல் பலர் தடு­மாறு­கின்­ற­னர்.

இதை­ய­றிந்த பழுது நீக்­கும் கடைக்­கா­ரர்­கள் பலர், கைபேசி, கணி­னி­களை இல­வ­ச­மாக சரி செய்­து­தர முன்­வந்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, பாகாங், சிலாங்­கூர், நெகிரி செம்­பி­லான், ஜோகூர், சபா, சர­வாக் ஆகிய பகு­தி­களில் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று நேற்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டிருந்தது.