மியன்மாரில் ஆகஸ்ட் 2023ல் பொதுத் தேர்தல் நடத்த திட்டம்

மியன்மாரில் ஆகஸ்ட் 2023ல் பொதுத் தேர்தல் நடத்த திட்டம்

1 mins read
989907ff-7a6c-412a-a903-d4b17cde93f7
-

யங்­கூன்: மியன்­மா­ரில் ஆகஸ்ட் 2023ல் தேர்­தல் நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் ராணுவ ஆட்­சிக்­கு­ழுத் தலை­வர் மின் ஆங் ஹ்லைங்கை மேற்­கோள்­காட்டி எம்­ஆர்­டிவி ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

"நாட்­டின் நிலைத்­தன்மை, அமை­தி­யைப் பொறுத்து, ஆகஸ்ட் 2023ல் பொதுத் தேர்­தலை நடத்த நாங்­கள் எங்­க­ளால் முடிந்த அளவு முயன்று வரு­கி­றோம்," என்­றார் மின் ஆங்.

எனவே, நாட்டு மக்­கள் அனை­வரும் தேசிய பதிவு அட்டை திட்­டத்­திற்கு ஒத்துழைப்பு தருமாறு அவர் வலி­யு­றுத்­தி­னார். இத்­திட்­டம் 25% மட்­டுமே நிறை­வே­றி­யுள்­ள­தாக அவர் சொன்­னார். ரோஹிங்­கி­யாக்­கள் இத்தேர்­தலில் வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­களா என்­பது இன்­னும் தெளிவாக தெரி­ய­வில்லை.