சோல்: தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கிவென்-ஹுய்க்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 31ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.
ஊழல் குற்றங்கள் தொடர்பில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 69 வயது பார்க்கிற்கு 'தேசிய ஒற்றுமையை' கருத்தில் கொண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் நீதித் துறை அமைச்சர் சொன்னார்.
பார்க், அவரது கூட்டாளி சோய் சூன்-சில் ஆகியோர் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு ஈடாக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக கோரி தென்கொரியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
2013ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்ற பார்க், நான்கு ஆண்டுகளில் பதவியிறக்கப்பட்டார்.

