கிளந்தான், திரங்கானுவில் வெள்ள எச்சரிக்கை

கிளந்தான், திரங்கானுவில் வெள்ள எச்சரிக்கை

2 mins read
eaecfa47-8368-49ea-ac91-26daea16b04c
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் கிளந்­தான், திரங்­கானு ஆகிய மாநி­லங்­களில் டிசம்­பர் 30, 31 ஆகிய தேதி­களில் வெள்­ளம் ஏற்­படும் அபா­யம் உள்­ள­தாக அந்­நாட்­டின் நீர்ப்­பா­ச­னம் மற்­றும் வடி­கால் துறை தெரி­வித்­துள்­ளது.

இந்த மாதக் கடைசி வரை­யி­லான தட்­ப­வெப்ப நிலை குறித்து அந்­நாட்­டின் வானிலை ஆய்வு மையம் வெளி­யிட்­டுள்ள தர­வு­களின் அடிப்­ப­டை­யில் இது கணிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்தத் துறை தெரி­வித்­தது.

"கிளந்­தா­னில் டிசம்­பர் 30ஆம் தேதி இரவு 8 மணி முதல் அதற்கு மறு­நாள் இரவு 8 மணி வரை வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­படும். குவா மூசாங், கோலா கிராய் மற்­றும் அதன் சுற்று வட்­டா­ரங்­க­ளான சுங்கை காலாஸ் டாபோங், சுங்கை கிளந்­தான் ஆகிய இடங்­களில் உள்ள நீர்­நி­லை­க­ளின் தண்­ணீர் அளவு அபாய அளவை எட்­டக்­கூ­டும்," என்று அந்­தத் துறை எச்­ச­ரித்­துள்­ளது.

அந்த நாட்­களில் பொது­மக்­கள் விழிப்­பு­டன் இருக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் மலே­சி­யா­வில் கடந்த சில நாட்­க­ளா­கப் பெய்து வரும் கன­ம­ழை­, அத­னால் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு, நிலச்­ச­ரிவு போன்­ற­வற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 47 ஆகி உள்­ளது என்­றும் ஐந்து பேரைக் காண­வில்லை என்­றும் காவல்­து­றைத் தலை­வர் அக்­ரில் சானி அப்­துல்லா சானி தெரி­வித்­துள்­ளார்.

மாண்­ட­வர்­களில் 25 பேர் சிலாங்­கூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் 19 பேர் பாகாங்­கை­யும் மூன்று பேர் கிளந்­தா­னை­யும் சேர்ந்­த­வர்­கள் என்­றும் அந்த அதி­காரி தெரி­வித்­தார்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாரான், ராவுப், தெமெர்லோ, ஜெரான்­தட், கோலா லிபிஸ் ஆகிய இடங்­களில் துப்­பு­ரவுப் பணி­கள் மேற்­கொள்­ளப்படுவதை உறுதி செய்­வ­தில் 332 ராணுவ வீரர்­களும் 213 காவல்­துறை அதி­கா­ரி­களும் பணி­யாற்றி வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் வெள்­ளத்­தால் பள்­ளி­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் மாண­வர்­கள் பள்­ளி மீண்­டும் தொடங்­கு­வதை ஒத்தி வைப்­பது குறித்து ஆய்­வு­செய்­யப்­படும் என்று கல்வி அமைச்­சர் ரெட்ஸி ஜிடின் தெரி­வித்­துள்­ளார்.

பள்­ளி­களில் மேசை, நாற்­கா­லி­கள், கணி­னி­கள் உள்­ளிட்ட தள­வா­டச் சாத­னங்­க­ளின் சேதங்­கள் குறித்து கல்வி அமைச்சு ஆய்வு செய்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

வெள்­ளச் சேதா­ரங்­க­ளைச் சரி­செய்து மீண்­டும் பள்­ளியைத் திறக்க கல்வி அமைச்சு தீவி­ர­மாக செயல்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் ரெட்ஸி கூறி­னார்.