சிரமப்படும் மலேசிய மக்கள்

சிரமப்படும் மலேசிய மக்கள்

1 mins read
2750a355-619b-42a2-bb1c-b07c18f77de4
சிலாங்கூரில் வெள்ளத்தால் குப்பையான பொருட்கள் மலைபோல் குவிந்துள்ளன. படம்: தி ஸ்டார் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வைச் சென்ற வாரம் புரட்­டிப் போட்ட கன­மழை, வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சிலர் தங்­க­ளுக்கு இன்­ன­மும் உத­வியோ, நிதி­யு­த­வியோ கிடைக்­க­வில்லை என்­கின்­ற­னர்.

ரோகியா அப்­துல் அஜீஸ் என்ற பெண் உணவு கேட்டு சிலாங்­கூ­ரில் உள்ள நிவா­ரண மையம் ஒன்­றிற்­குச் சென்­றுள்­ளார். ஆனால் குறிப்­பிட்ட பகு­தி­யில் உள்­ள­வர்­களுக்­குத் தான் அந்த உணவு என்று கூறி அதி­கா­ரி­கள் உணவு தர மறுத்­து­விட்­ட­தாக அவர் சொன்­னார்.

தான் சற்று நேரம் காத்­தி­ருந்த பிற­கும், மீத­மான உண­வைக்கூட அவர்­கள் தர­வில்லை என்று அப்­பெண் கூறி­ய­தாக உள்­ளூர் ஊட­கச் செய்தி கூறு­கிறது.

"அர­சாங்க அமைப்போ, அர­சி­யல்­வா­தி­களோ யாரும் உத­விக்கு வர­வில்லை. நாங்­கள் அக­தி­க­ளைப் போல் உணர்­கி­றோம்.

"உதவி தேவைக்­கான விண்­ணப்­பங்­களை 20ஆம் தேதியே அனுப்­பி­விட்­டோம். என்­றா­லும் இது­வரை எந்­தப் பதி­லும் இல்லை," என்­றார் அவர்.

வெள்ள நிவா­ரணப் பணி­களை ஒருங்­கி­ணைக்க பணிக்­குழு ஒன்றை அமைத்­துள்­ள­தாக அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, வெள்ள சேதத்­தைப் பார்­வை­யிட ஹுலு லங்­காட்­டிற்­குப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் சென்­றி­ருந்

­தார்.

அப்­போது பிர­த­ம­ரின் பாது­காப்பு வாக­னங்­கள் செல்­வ­தற்கு ஏது­வாக ஆம்­பு­லன்ஸ் நிறுத்­தப்­பட்­டது சர்ச்சைக்கு உள்ளானது. விபத்­தைத் தவிர்க்­கும் நோக்­கி­லேயே போக்குவரத்து போலி­சார் அப்­படிச் செய்ததாக மலேசிய போலிஸ் விளக்கம் அளித்துள்ளது.