கிருமித்தொற்றுக்கு எதிராக பல நாடுகள் நடவடிக்கை

கிருமித்தொற்றுக்கு எதிராக பல நாடுகள் நடவடிக்கை

2 mins read
bcf4853a-e3ed-4bf5-8755-cb5b18b3b7da
-

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான ஒரு­வர் நேற்று மாண்­டு­விட்­டார். ஏற்­கெ­னவே நாட்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த 80 வயது ஆட­வ­ருக்கு நேர்ந்த அந்த மர­ணமே ஓமிக்­ரான் தொற்­றால் அந்­நாட்­டில் ஏற்­பட்ட முதல் மர­ண­மா­கும்.

இருப்­பி­னும் கூடு­தல் கட்­டுப்­பா­டு­க­ளைக் கொண்டு வர ஆஸ்­தி­ரே­லியா தொடர்ந்து மறுத்து வரு­கிறது. அங்கு அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வந்­தா­லும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறை­வா­கவே உள்­ளது என்­கி­றார்­கள் அதி­கா­ரி­கள்.

மலே­சி­யா­வில் தொடர்ந்து இரண்­டா­வது நாளாக நேற்­றும் 3,000த்திற்­கும் குறை­வான தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. இதற்­கி­டையே, சவுதி அரே­பி­யா­வில் இருந்து திரும்­பிய இரு­வ­ருக்கு பினாங்­கில் ஓமிக்­ரான் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

தென்­கொ­ரிய அர­சாங்­கம் ஃபைசர் நிறு­வ­னத்­தின் கொவிட்-19 மாத்­தி­ரை­க­ளுக்கு அவ­ச­ர­கால பயன்­பாட்டு அனு­மதி அளித்து

உள்­ளது.

ஃபைச­ரின் 'பேக்ஸ்­லோ­விட்' எனும் மாத்­திரை, தொற்­றால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அல்­லது வீட்­டில் இருந்து குண­ம­டை­வோ­ரின் உடல்­நிலை மோச­மா­வ­தைத் தடுக்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தாக உணவு, மருந்து பாது­காப்பு அமைச்­சர் கிம் கேங்-லிப் சொன்­னார்.

லேசான அல்­லது மித­மான கொவிட்-19 அறி­கு­றி­கள் உடைய, 12 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் அல்­லது 40 கிலோ­வுக்­கும் அதி­க­மான உடல் எடை கொண்­ட­வர்­க­ளுக்கு இந்த மாத்­திரை கொடுக்­கப்­படும்.

ஹாங்­காங் அர­சாங்­கம் கொரி­யன் ஏர்­லைன்ஸ் விமா­னங்­கள் தங்­கள் நாட்­டிற்­குள் நுழைய இரண்டு வாரத்­திற்கு (ஜன­வரி 8 வரை) தடை விதித்­துள்­ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சென்ற வாரம் அந்த விமா­னத்­தின் மூலம் தென்­கொ­ரி­யா­வில் இருந்து ஹாங்­காங்­கிற்­குச் சென்ற 12 பய­ணி­க­ளுக்குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வின் ‌ஷியான் நக­ரத்­தில் கிரு­மி­தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அங்கு ஐந்­தா­வது நாளாக முடக்­க­நிலை நீடிக்­கிறது.

இந்­நி­லை­யில், அந்­ந­க­ரம் முழு­வ­தும் கிருமி நாசினி கொண்டு சுத்­தம் செய்­யும் பணி நடை­பெற்­றது. அத்­து­டன் அங்கு நான்­கா­வது முறை ஒட்­டு­மொத்த பரி­சோ­த­னைக்கு அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர்.

மியன்­மா­ரில் ராணுவ ஆட்­சிக் குழு­வி­ட­மி­ருந்து மறைந்து வாழும் தாதி­யர் சிலர் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கும் போரா­ளி­களுக்­கும் மருத்­துவ சிகிச்சை அளிப்­ப­தாக ஊட­கச் செய்­தி­கள் கூறு­கின்­றன.

ராணுவ ஆட்­சியை எதிர்த்து பல மருத்­துவ ஊழி­யர்­கள் மியன்­மார் மருத்­து­வ­ம­னை­களில் இருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.

ஆனால் தங்­கள் பணி­யைத் தொட­ரும் நோக்­கி­லும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு உத­வும் நோக்­கி­லும் தற்­கா­லிக மருத்­து­வ­மனை­கள் மூலம் அவர்கள் தங்­கள் பணி­யைத் தொடர்­கின்­ற­னர். நோயா­ளி­க­ள் அழைத்­தால், அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்றும் சிகிச்சை அளிக்­கின்­ற­னர்.