பிரேசிலில் அணைகள் உடைப்பு; சாலைகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம்

பிரேசிலில் அணைகள் உடைப்பு; சாலைகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம்

1 mins read
9f12c84f-94d8-4efc-9d9e-94566db4af49
அணைகள் உடைந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.படம்: ராய்ட்டர்ஸ் -

பஹியா: பிரே­சி­லின் வட­கி­ழக்கே உள்ள பஹியா என்­னும் பகு­தி­யில் கடந்த சில நாட்­க­ளாக தொடர் கன­மழை பெய்­தது. இதில் ஏற்­கெ­னவே 18 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

கன­மழை கார­ண­மாக ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்­கெ­டுத்­தன. அணை­களும் நிரம்பி வழிந்­தன.

இந்­நி­லை­யில் சனிக்­கி­ழ­மை­யன்று வெருகா நதி­யில் கட்­டப்­பட்­டுள்ள இகுவா அணை­யும், ஞாயி­றன்று காலை ஜிசப்பே என்ற அணை­யும் உடைந்­தது. இதைத் தொடர்ந்து சாலை­களில் வெள்­ள­நீர் பெருக்­கெ­டுத்­தது.

முன்­னெச்­ச­ரிக்­கை­யாக வெருகா நதியை ஒட்­டி­யி­ருந்த மக்­கள் பாது­காப்­பான இடத்­திற்கு வெளி­யேற்­றப்­பட்­ட­தால் உயி­ரி­ழப்பு எது­வும் ஏற்­ப­ட­வில்லை.