தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரியாவின் துறைமுகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்

2 mins read
eaac77bd-46f0-4248-bc07-f9d05d88abe2
சிரியாவின் லதாகியா துறைமுகம், இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலால் தீப்பற்றி எரிகிறது. கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நடந்த இந்தத் தாக்குதலால் ஏராளமான கொள்கலன்கள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கெய்ரோ: சிரி­யா­வின் லதா­கியா நக­ரில் உள்ள முக்­கிய வர்த்­த­கத் துறை­மு­கத்­தில் இஸ்­ரேல் நேற்று ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­யது. அந்­தத் துறை­மு­கத்­தின் கொள்­க­லன்­கள் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த பகு­தி­யில் நடத்­தப்­பட்ட இந்­தத் தாக்­கு­த­லால் அந்­தத் துறை­மு­கப் பகு­தி­யில் தீ பற்றி எரி­கிறது. ஏரா­ள­மான கொள்­க­லன்­களும் அவற்­றில் உள்ள சரக்­கு­களும் நெருப்­பில் சாம்­ப­லா­யின.

இஸ்­ரே­லின் இந்­தத் தாக்­கு­த­லில் துறை­மு­கம் மட்­டு­மின்றி மருத்­து­வ­மனை, குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள், கடை­கள் ஆகி­ய­வை­யும் பலத்த சேத­ம­டைந்­துள்­ளன என்று சிரி­யா­வின் அரசு ஊட­கம் ஒன்று தெரி­வித்­தது.

சிரியா மீது தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்ட இந்­தத் தாக்­கு­தல்­கள் ஈரா­னிய ஆத­ரவுப் போரா­ளி­க­ளை இலக்காகக் கொண்டு தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வர தீய­ணைப்பு வீரர்­கள் போராடி வரு­கின்­ற­னர்.

டிசம்­பர் மாதத்­தில் சிரி­யா­வின் முக்­கிய பகு­தி­யில் இஸ்­ரேல் மேற்­கொண்­டுள்ள இரண்­டா­வது தாக்­கு­தல் இது என்று சிரி­யா­வின் அர­சாங்க ஊட­க­மான சானா தெரி­வித்­தது.

திங்­கள்­கி­ழமை பின்­னி­ரவு 3.21 மணிக்கு மத்­திய தரைக்­க­டல் வழி­யாக லதா­கியா துறை­மு­கத்­தில் உள்ள கொள்­க­லன்­கள் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த இடத்­தைக் குறி­வைத்து இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த ஊட­கம் தெரி­வித்­தது.

2011ஆம் ஆண்­டில் சிரி­யா­வில் உள்­நாட்­டுப் போர் தொடங்­கி­ய­தில் இருந்து இஸ்­ரேல் அந்­நாட்­டின் மீது பல­முறை விமா­னத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளது. சிரியா நாட்டு அர­சாங்­கம், அதன் கூட்­ட­ணிப் படை­யான ஈரான் ஆத­ர­வுப்­படை­கள் மற்­றும் ஹிஸ்­புல்லா போரா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு எதி­ராக இஸ்­ரேல் தொடர்ந்து தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு வரு­கிறது. இதே­போன்ற தாக்­கு­தலை சிரியா டிசம்­பர் 7ஆம் தேதி மேற்­கொண்­டது. அந்­தத் தாக்­கு­தல் லதா­கியா துறை­மு­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஈரான் நாட்டு ஆயு­தக் கப்­பலை இலக்கு வைத்து தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.