நிலச்சரிவால் பாதுகாப்பற்ற நிலையில் அடுக்குமாடி வீடுகள்

நிலச்சரிவால் பாதுகாப்பற்ற நிலையில் அடுக்குமாடி வீடுகள்

1 mins read
313b428f-436b-4331-84e0-25eab8295a26
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் தாமான் டுட்­டா­வில் உள்ள 'தி செரி டுட்டா 1' கொண்­டோ­மி­னிய அடுக்­கு­மா­டிக் கட்­ட­டத்­தின் கட்­ட­மைப்­பில் குறை­பா­டு­கள் ஏற்­பட்­டுள்­ள­தால் அது மக்­கள் வசிப்­ப­தற்கு பாது­காப்பு அற்­றது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த சில நாள்க­ளா­கப் பெய்த கன­மழை கார­ண­மாக பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. அவ்­வாறு ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வின் அரு­கே­யுள்ள கொண்­டோ­மி­னிய அடுக்­கு­மா­டிக் கட்­ட­டங்­கள் ஆபத்­தான நிலை­யில் உள்­ள­தாக அதில் இருக்­கும் குடி­யி­ருப்­பு­வா­சி­களை அங்­கி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்தி வரு­கிறது அந்த கொண்­டோ­மி­னிய நிர்­வா­கம்.

மலே­சி­யா­வின் பொதுப் பணித் துறை, மலே­சிய பொதுப் பணி கழ­கம் உள்­ளிட்ட அர­சாங்க அமைப்­பு­கள் மேற்­கொண்ட சோத­னை­யில் அந்த அடுக்­கு­மா­டிக் கட்­ட­டம் நிலச்­ச­ரி­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது.

அந்­தப் பகு­தி­யில் மோச­மான நிலச்­ச­ரிவு ஏற்­படும் அபா­யம் உள்­ள­தா­க­வும், அவ்­வாறு ஏற்­பட்­டால் கட்­ட­டத்­தின் கட்­ட­மைப்பை அது பாதிக்­கக்­கூ­டும் என்றும் அந்த அமைப்­பு­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளன.

அந்­தப் பகு­தி­யில் மொத்­தம் 14 அடுக்­கு­மாடி கட்­ட­டங்­கள் உள்­ளன. ஒவ்­வொரு கட்­ட­டத்­தி­லும் மூன்று முதல் ஆறு மாடி­கள் உள்­ளன.

இவற்றில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு கொண்டோமினிய அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிக்கும் 34 வீடுகளில் குடியிருப்போரை உட­ன­டி­யாக காலி­செய்ய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நிலையில் மலைப்பாங்கான பகுதியில் கட்டடத்தின் அடிப்பகுதியில் உள்ள மண் சரிந்து ஆபத்தான நிலையில் இருக்கும் அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றின் புகைப்படத்தை இணையவாசிகள் பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.