தென் சீனாவில் கொவிட்-19 விதிமுறையை மீறியவர்களை ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது, உள்ளூர் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அரசாங்கத்தின் இந்தக் கடுமையான அணுகுமுறை சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2010ல் பொதுஇடங்களில் சந்தேக நபர்களை அவமானப்படுத்துவதற்கு சீனா தடை விதித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. படம்: @மெய்க்809588/டுவிட்டர்
கொவிட்-19 விதிமுறையை மீறியவர்களுக்கு தண்டனை
1 mins read
-

