ஹாங்காங்கில் பத்திரிகை அலுவலகத்தில் அதிரடிச் சோதனை; அறுவர் கைது

ஹாங்காங்கில் பத்திரிகை அலுவலகத்தில் அதிரடிச் சோதனை; அறுவர் கைது

1 mins read
d9733d47-2939-4b4e-a3ac-cbc8aced080c
கைப்பற்றப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்லும் அதிகாரிகள். படம்: இபிஏ -

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் தேசிய பாது­காப்பு காவல்­து­றை­யைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான அதி­கா­ரி­கள், அதிரடிச் சோத­னை­களை நடத்தி இணை­யச் செய்­தியை நடத்­தும் நிறு­வ­னத்­தின் ஆறு உறுப்­பி­னர்­களை கைது செய்­துள்ளனர்.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக 'ஸ்டாண்ட் நியூஸ்' ஊட­கம் செயல் ­ப­டு­வ­தா­கக் கூறி தேசத் துரோக குற்­றச்­சாட்­டின் கீழ் அவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

அறு­வ­ருக்­கும் வயது 34 முதல் 73 வரை. 'ஸ்டாண்ட் நியூஸ்' தற்­போ­தைய, முன்னாள் இயக்­கு­நர்­கள், மூத்த ஊழி­யர்­கள் உள்பட பலர் கைது செய்­யப்­பட்டுள்ளனர்.

கடந்த மாதம் தலைமை ஆசி­ரி­யர் பத­வி­யி­லி­ருந்து வில­கிய சுங் புய் குவெ­னும் கைது செய்­யப்­பட்­டு உள்­ளார். தேசத் துரோக வெளி­யீ­டுகளை வெளி­யிட சதி செய்­த­தாக ஆறு பேர் மீதும் குற்­றம்­சாட்­டப்­படும் எனத் தெரிகிறது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட காவல்­துறை, இணை­யச்செய்தி நிறு­வ­னத்­தில் ஆவ­ணங்­க­ளைக் கைப்­பற்றுவதற்காக தேசிய பாது­காப்­புப் படை­யி­னர் சோதனை நடத்­தி­னர் என்று தெரி­வித்­தது.

சீருடை அணிந்த சீருடை அணி­யாத 200க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அது சொன்னது.

மற்­றொரு நில­வ­ரத்­தில் ஹாங்­காங் செய்­தி­யா­ளர் சங்­கத்­தின் தலை­வ­ராக உள்ள ஸ்டாண்ட் நியூஸ் ஊட­கத்­தின் துணை ஆசி­ரி­ய­ரான ரோன்­சன் சானும் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளார்.

ஆனால் அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.