சௌத்ஹேம்டனிடம் தவித்த ஸ்பர்ஸ் குழு

சௌத்ஹேம்டனிடம் தவித்த ஸ்பர்ஸ் குழு

1 mins read
ded6ac52-3290-4757-a401-a775f927237a
-

லிவர்­பூ­லைப் போலவே பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் ஆதிக்­கம் செலுத்தும் முனைப்பில் இருக்­கும் டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மற்­றொரு போட்­டி­யில் செளத்­ஹேம்­டன் குழுவை வெற்றி கொள்ள முடி­யா­மல் திண­றி­யது.

இத்­த­னைக்­கும் ஆட்­டத்­தின் 39வது நிமி­டத்­தில் இரண்டு தப்­பாட்­டத்­திற்­காக இரண்டு முறை மஞ்­சள் நிற அட்டை காண்­பிக்­கப்­பட்டு சௌத்­ஹேம்­ட­னின் முகம்­மது சலிசு என்­ப­வர் திடலை விட்டு விலக வேண்­டி­ய­தா­யிற்று.

ஆட்­டத்­தின் முதல் கோலை செளத்­ஹேம்­ட­னின் வார்ட் பிர­வுஸ் என்­ப­வர் 25வது நிமி­டத்­தில் போட்­டார். பின்­னர், முகம்­மது சலி­சு­வின் தப்­பாட்­டம் கார­ண­மாக கிடைத்த பெனால்டி வாய்ப்­பால் ஸ்பர்­ஸின் ஹேரி கேன் கோல் போட ஆட்­டம் 1-1 என சம­நிலை கண்­டது.

அதன்­பின் ஸ்பர்ஸ் எவ்­வ­ளவோ முயன்­றும் அத­னால் அடுத்த கோலை போட முடி­ய­வில்லை.

ஸ்பர்ஸ் வெற்றி பெற முடி­யாத ஏமாற்­றம் குறித்­துப் பேசிய அதன் நிர்­வாகி அண்­டோ­னியோ கோன்டே, "எனது எதிர்­பார்ப்­பு­கள் மிக­வும் அதி­க­மா­னவை. ஏனெ­னில் போட்­டி­யில் வெற்றி பெறு­வ­து­தான் நான் வழக்­க­மாக எதிர்­பார்க்­கும் ஒன்று. நிச்­ச­யம் இது எனக்கு ஒரு பெரிய ஏமாற்­றம்­தான்.

"எனது குழு பெரும் முன்­னேற்­றம் காண வேண்­டி­யுள்­ளது. இது­போன்ற ஆட்­டங்­களில் நாம் வெற்றி பெற்று மூன்று புள்­ளி­களை முழு­வ­து­மாகப் பெற்­றி­ருக்க வேண்­டும்," என்று தனது ஆதங்­கத்தை வெளி­யிட்­டார்.