நியூயார்க்: உலகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் ஒட்டுமொத்த உயிரிழப்பு குறைந்து
உள்ளது.
ஆனால் பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய பிறகு, அமெரிக்காவில் ஏற்பட்ட இளையர் மரணங்களுக்குக் கிருமித்தொற்றே முதல் காரணமாக உள்ளது என்கின்றன புள்ளி விவரங்கள்.
சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடும் வரை, அமெரிக்காவில் நேர்ந்த மரணங்களில் 14 விழுக்காடு கிருமித்தொற்றால் ஏற்பட்டவையாகும். தற்போது அது 11 விழுக்காடாகக் குறைந்து
உள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களே கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படவும் உயிரிழக்கவும் வாய்ப்புள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் அவ்வயதினர் உயிரிழப்பது சற்று குறைந்து
உள்ளது.

