பத்திரிகை நிறுவன அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டனர்

பத்திரிகை நிறுவன அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டனர்

1 mins read
2b4cfc02-1f4a-4fd8-9d31-8ed6f927ccd5
-

ஹாங்காங்: ஹாங்­காங்­கில் ஸ்டாண்ட் நியூஸ் பத்­தி­ரிகை நிறு­வன அதி­கா­ரி­கள் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

மூத்த ஆசி­ரி­யர்­கள் இரு­வர் மீது அர­சாங்க கீழ­றுப்பு செய்­தி­களை வெளி­யிட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் அந்­நி­று­வ­னத்­தின் ஆறு பேரை ஹாங்­காங் போலி­சார் கைது செய்­த­னர். அங்­கி­ருந்த கைபேசி, கணி­னி­கள், ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் மீதான சீனா­வின் இந்த ஒடுக்­கு­மு­றைக்கு அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக நாடு­கள் பல­வும் கண்­ட­னம் தெரி­வித்­தன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய கேரி லாம், "பத்­தி­ரிகை என்­பது தேசத்­து­ரோ­கம் அல்ல என்­பதை ஒப்­புக்­கொள்­கி­றேன். ஆனால் செய்தி அறிக்கை என்ற போர்­வை­யில் தேசத்­து­ரோக செயல்­கள் மூலம் மற்­ற­வர்­க­ளைத் தூண்டி­வி­டு­வதை மன்­னிக்க முடி­யாது," என்­றார்.