தொடர் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மலேசியா

2 mins read
7a94bf88-b34d-4694-97f9-5313c5777b3e
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் கிழக்கு கடற்­கரை பகு­தி­யில் அபா­ய­க­ர­மான அள­வில் தொடர் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று மலே­சிய வானிலை மையம் எச்­ச­ரித்­துள்­ளது. இதை­ய­டுத்து, அங்கு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.

கிளந்­தான், திரெங்­கானு, பாகாங், ஜோகூர் ஆகிய நான்கு மாநி­லங்­களில் உள்ள கிழக்கு கடற்­கரை மாவட்­டங்­க­ளுக்கு உச்­சநிலை சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. மற்ற மாவட்­டங்­க­ளுக்கு இன்று வரை 2ம் நிலை கன­மழை எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

ஆறு மணி நேரத்­தில் 60 மி.மீ. மழை பெய்­யக்­கூ­டும் என வானிலை மையம் முன்­னு­ரைத்துள்ளது.

இருப்­பி­னும் நேற்று முன்­தி­னமே மழை பெய்­யத் தொடங்­கி­விட்ட நிலை­யில், கிளந்­தான் நிவா­ரண மையங்­களில் கிட்­டத்­தட்ட 1,000 பேர் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­னர். ஜெலி, குலா கராய் மாவட்­டங்­களில் வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது.

மெர்­சிங் மாவட்­டத்­தில் உள்ள கட­லில் உய­ர­மான அலை­கள் எழும்பு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால், பொதுமக்­கள் யாரும் கடற்­கரைக்­குச் செல்லவேண்­டாம் என்று அறி­வு­றுத்­­தப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, கன­ம­ழை­யால் ஏற்­ப­டக்­கூ­டிய இடர்­பா­டு­க­ளைச் சமா­ளிக்க தேசிய பேரி­டர் மேலாண்மை முகமை தயார் நிலை­யில் உள்­ளது.

இதற்­காக நாடு முழு­வ­தி­லும் 86 இடங்­களில் ஆயு­தப் படை­யி­ன­ரும் மீட்பு வாக­னங்­களும் தயா­ராக உள்­ள­தா­கத் தற்­காப்பு அமைச்­சர் ஹிஸா­மு­தின் சொன்­னார்.

இப்­ப­ணி­யில் 115 அதி­கா­ரி­கள், 2,768 பணி­யா­ளர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். ஆறு பெரிய டிரக்­கு­கள், மூன்று சிறிய டிரக்­கு­கள், 129 பட­கு­கள் மற்­றும் 109 இயந்­திர பட­கு­களும் தயா­ராக உள்­ள­தாக அவர் சொன்­னார்.

பேரி­டர் ஏற்­பட்­டால் மக்­க­ளுக்கு உத­வும் வகை­யில் கிட்­டத்­தட்ட 4,000 பணி­யா­ளர்­கள் தயா­ராக இருப்­ப­தாக ஜோகூர் போலிஸ் தெரி­வித்­துள்­ளது. பட­கு­கள், நான்கு சக்­கர வாக­னங்­களும் தயா­ராக உள்­ள­தாக அது கூறி­யது.

சென்ற வாரம் பெய்த தொடர் கன­ம­ழை­யால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சில மாநி­லங்­கள் இன்னமும் மீளாத நிலை­யில், அங்கு மீண்­டும் பெய்­ய­வி­ருக்­கும் மழை, நிலைமையை மேலும் மோச­மாக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.