மழையால் தவிக்கும் மலேசியா

2 mins read
2ea92d0d-0835-48ea-a990-4635440ba8f3
மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் பெங்கலான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம். படம்: பெர்னாமா -

பெட்டாலிங் ஜெயா: மலே­சி­யா­வின் பாகாங், நெகிரி செம்­பி­லான், மலாக்கா, ஜொகூர் மாநி­லங்­களில் தொடர்ந்து கன­மழை பொழி­யக்­கூடும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் தொடர்­பில் அந்­நாட்டின் வானிலை ஆய்வு மையம் நாளை வரை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இந்த மாநி­லங்­க­ளின் பல பகுதி­களில் தொடர்ந்து கனத்த மழை பெய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. மேலும், பேராக் மாநி­லத்­தின் தெற்­குப் பகுதி, சிலாங்­கூர், தலை­நகர் கோலா­லம்­பூர் உள்­ளிட்ட பகுதி­களில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்த வண்­ணம் இருக்­கும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டுள்­ளது.

கிளந்­தான், திரங்கானு உள்­ளிட்ட பகு­தி­க­ளின் சில இடங்­களில் நாளை மறு­நாள் வரை தொடர்ந்து மழை பொழி­யும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது. சாபா மாநி­லத்­தின் மேற்­குக் கடற்­க­ரைப் பகு­தி­யின் சில இடங்­க­ளி­லும் நாளை மறு­நாள் வரை தொடர்ந்து மழை பெய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, ஜோகூர் மாநி­லத்­தி­லும் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. செகா­மாட் பகு­தி­யில் குறைந்­தது 133 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 456 பேருக்­காக எட்டு பாது­காப்­புக் கூடங்­கள் அமைக்­கப்­பட்­டன. முன்­ன­தாக, ஜோகூ­ரின் சுங்கை மூவார், சுங்கை தங்­காக் ஆகிய இரண்டு ஆறு­களில் நீரின் அளவு அபா­ய­க­ர­மான நிலைக்கு உயர்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. சாபா, நெகிரி செம்­பி­லான், கிளந்­தான், திரங்­கானு உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­லும் வீடு­க­ளை­விட்டு வெளி­யேறு­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்­தது. வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குக் கூடு­தல் நிதி­யுதவி வழங்­கப்­போ­வ­தா­க­வும் மலே­சிய பிர­த­மர் இஸ்­மா­யில் சாப்ரி வாக்­கு­றுதி அளித்­துள்­ளார். பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 61,000 ரிங்­கிட் வரை­யி­லான நிதி­யு­தவி இதில் அடங்­கும்.

சென்ற மாதம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளின் தலை­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் 1,000 ரிங்­கிட் நிதி­ய­தவி வழங்­கப்­பட்­டு­வ­ரு­கிறது. "இந்த நட­வ­டிக்கை 45,000க்கும் அதி­க­மான குடும்­பங்­க­ளுக்­குப் பல­ன­ளிக்­கும். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்டு தற்­கா­லி­கக் கூடங்­க­ளுக்­குப் போகா­தோரை நாங்­கள் அடை­யா­ளம் கண்டு முடித்­த­வு­டன் இந்த நட­வ­டிக்­கை­யால் பல­ன­டை­யும் குடும்­பங்­க­ளின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­க­லாம்," என்று திரு இஸ்­மா­யில் கூறி­ய­தாக மலே மெயில் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. மேலும், நீண்ட காலத்தில் வெள்­ளப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க, ஆறு­க­ளை­யும் சாக்­க­டை­க­ளை­யும் மேலும் ஆழ­மாக்­கு­வது போன்ற நட­வ­டிக்­கை­களை எடுப்­பது குறித்து மலே­சியா ஆராய்­வ­தா­க­வும் திரு இஸ்­மா­யில் குறிப்­பிட்­டார்.