சிலி நாட்டில் விலங்குகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி

1 mins read
aa0cff3c-bb8c-4d60-822b-9dc5fc1a2eb5
-

புயின்: லத்­தீன் அமெ­ரிக்­கா­வி­லேயே முதன்­மு­றை­யாக சிலி நாட்­டின் புயின் விலங்­கி­யல் தோட்­டத்­தில் வள­ரும் விலங்­கு­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

கிரு­மித் தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கரு­தப்­படும் வங்­காள புலிக்­கும் குரங்கு வகை­யைச் சேர்ந்த ஓரங்­குட்­டான், சிங்­கம் என 10 விலங்­கு­க­ளுக்­குப் பரி­சோ­தனை அடிப்­ப­டை­யில் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டது.

இவற்­றுக்கு டிசம்­பர் 13ஆம் தேதி முதல் முறை தடுப்­பூசி போடப்­பட்ட நிலை­யில், நேற்று முன்­தி­னம் இரண்­டா­வது முறை தடுப்­பூசி போடப்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வின் சில விலங்­கிய தோட்­டங்­களும் விலங்­கு­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப் போவ­தா­கக் கூறி­யுள்­ளன.

சிலி­யில் மூன்று வய­துக்கு மேற்­பட்டவர்களில் 90 விழுக்­காட்டு மக்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.