மலேசியாவில் தொடர் கனமழை ஏற்படுத்திய மோசமான பாதிப்பின் எதிரொலி 'நோன்புப் பெருநாள் வரை காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு நிலவும்'

2 mins read
a9e806a3-2039-43d4-ac7f-b62d8c4ea289
கனமழையால் அழுகி வீணாகிப் போன மிளகாய் பயிர்களைத் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து சுத்தம் செய்கிறார் அகமது இர்ஹாம் முகமது நூர். படம்: அகமது இர்ஹாம் முகமது நூர் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பேர­ழிவை ஏற்­ப­டுத்­திய வெள்­ளம் கார­ண­மாக, சீனப் புத்­தாண்டு, நோன்புப் பெரு­நாள் வரை காய்­க­றி­களுக்குத் தட்டுப்­பாடு நில­வும் என்று கூறப்­படு­கிறது.

தொடர் கன­ம­ழை­யால், மலேசியா­வில் கீரைத் தோட்­டம் முதல் வாத்து பண்னை வரை அனைத்­தும் நாச­மாகி­விட்­டன.

ஜோகூ­ரில் அசிம் ஓமர் என்­ப­வரின் வாத்து பண்ணை வெள்­ள­நீ­ரில் மூழ்­கி­ய­தில், அவர் கிட்­டத்­தட்ட 800 வாத்­து­களை இழக்க நேரிட்­டது. அத்­து­டன் 1,200 முட்­டை­க­ளை­யும் வீசி எறிய வேண்­டி­யி­ருந்­த­தா­க­வும் குறைந்­தது 15,000 ரிங்­கிட் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

இம்மாதத்தில் அறு­வ­டைக்­காக காத்­தி­ருந்த மிள­காய் பயிர்­கள் சேத­ம­டைந்­த­தால் 100,000 ரிங்­கிட் இழப்பு ஏற்­பட்­ட­தாக அக­மது இர்­ஹாம் முக­மது நூர் சொன்­னார்.

இதன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ருக்­கான ஏற்­று­ம­தி­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜோகூ­ரில் யோங் கா காய்­க­றிப் பண்­ணை­யின் மேலா­ளர் பெர்­னார்ட் தெஹ் தெரிவித்தார்.

சீனப் புத்­தாண்­டிற்­குள், சிங்­கப்­பூ­ருக்­கான வழக்­க­மான கீரை விநி­யோ­கம் 80 விழுக்­காடு வரை மீளும் என்­றார் அவர்.

"வெள்­ளம் ஏற்­ப­டுத்­திய பேர­ழிவு கார­ண­மாக, சீனப் புத்­தாண்டு, நோன்­புக் காலம் வரை காய்­க­றி­களுக்­குத் தட்­டுப்­பாடு நில­வும்.

"நிலங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ள­தால், நோன்பு காலத்­திற்­குத் தேவை­யா­ன­வற்றை விவ­சா­யி­க­ளால் உரிய நேரத்­தில் பயிர் செய்ய முடி­யாது.

"ஜோகூர், சிலாங்­கூர், பாகாங் ஆகிய மாநி­லங்­களில் வெள்­ளத்­தால் பல விவ­சா­யி­கள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

"தற்­போது போது­மான வெளி­நாட்டுத் தொழி­லா­ளர்­களும் இல்லை," என்று காய்­கறி விவ­சாயி­கள் சங்­கத்­தின் தலை­வர் லிம் செர் க்வீ கூறி­னார். விநி­யோக நெருக்­கடி கார­ண­மாக காய்­க­றி­க­ளின்வி லை 30 விழுக்­காடு வரை உயர்ந்­துள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.