பேங்காக்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சுற்றுலாக் கட்டணமாக 300 பஹட் (12 சிங்கப்பூர் வெள்ளி) வசூலிக்க தாய்லாந்து திட்டமிடுவதாக மூத்த அதிகாரிகள் கூறினர். இது சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தவும் எதிர்பாராத விபத்துக்கு உள்ளாகும் சுற்றுப் பயணிகளின் மருத்துவ செலவுக்குப் பயன்படுத்தப்படும் என்றனர் அவர்கள்.
"காப்புறுதியில் இடம்பெறாத சில அம்சங்களால் பயணிகள் பாதிக்கப்படும்போது, அவர்களைக் கவனித்துக்கொள்வது எங்களின் சுமையாகிவிடுகிறது," என்றார் தாய்லாந்து சுற்றுலா ஆணையத் தலைவர். இந்தக் கட்டணம் விமான டிக்கெட்டுடன் சேர்த்து வசூலிக்கப்படும். இவ்வாண்டு 5 முதல் 15 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருவார்கள் என்று அந்நாடு எதிர்பார்க்கிறது.

