மாராங் (மலேசியா): போலி கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மலேசிய மருத்துவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் ஏற்கெனவே அவரைத் தடுத்து வைத்திருந்தனர்.
திரங்கானு மாநிலத்தின் மாராங் வட்டாரத்தில் தனியார் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்த அந்த மருத்துவர், போலி கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை வழங்கியதற்குக் கட்டணம் பெற்றார் என்று சந்தேகிக்கப்படுவதாக திரங்கானு மாநிலத்தின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது. தடுப்பூசிகளைப் போடாமலேயே அவர் சான்றிதழ்களைத் தந்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியில் அவர் தன்னை நாடி வந்தோரிடம் போலிச் சான்றிதழ்களைக் கொடுக்கவில்லை. அவருக்கு எதிராக சிலர் புகார் கொடுத்தனர்.

